search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டார்ச்லைட்"

    • பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
    • விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந்தேதி அன்றே டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ெசன்னை, ஜன.31-

    பாராளுமன்றத் தேர்த லில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆைண யத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பாராளுமன்றத் தேர்த லில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வ தற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல் ஹாசன் வெளிநாடு செல்லவிருப்ப தால், கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகி யோருடன் 'பாராளு மன்றத் தேர்தல்' குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட் டங்களை உருவாக்குவதற் கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்ப தற்கும் கமல்ஹாசன் 'தேர் தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை' உருவாக்கி உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் துணைத் தலைவர்க ளான மவுரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அரு ணாச்சலம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பி னர்களாகச் செயல்படு வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் மனுவை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணை யம் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கு மா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ×