search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetri Duraisamy"

    • சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானது.
    • வெற்றி துரைசாமியின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது.

    சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

    இவரது சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது. பின்னர், சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    இந்நிலையில், வெற்றி துரைசாமி மறைவுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

    • எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள்.
    • நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி (வயது 45). இவர் இமாசல பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். கடந்த 4-ந்தேதி அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கார் டிரைவர் பலியானார். உதவியாளர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். வெற்றி மாயமானார்.

    அவரது உடல் 8 நாட்களுக்கு பின்னர் சட்லஜ் நதியில் பாறைகளுக்கு அடியில் இருந்து நேற்று முன்தினம் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது.

    இதையடுத்து அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     

    அதன் பின்னர் உடல் நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே வர முடியவில்லை. பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சார்பில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    நேற்று இரவு 8.20 மணிக்கு மேல் சென்னை நந்தனத்தில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் இருந்து வெற்றியின் உடல் தகனம் செய்வதற்காக தியாகராயநகரில் உள்ள கண்ணாம்மாபேட்டை மயான பூமிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, வெற்றியின் உடலுக்கு சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் கொள்ளி வைத்தார்.

    தகன சடங்குகள் நிறைவடைந்த நிலையில் சைதை துரைசாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளியே வந்தனர். மயானத்திற்கு முன்பு திரண்டு இருந்த ஆதரவாளர்கள், அ.தி.மு.கவினர் முன்னிலையில், சைதை துரைசாமி பேசியதாவது:-

    வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதி. போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த முறை இது கடைசி என்று சொல்லி சென்றான். அது அவனுக்கு கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒரு காலமும் நினைக்கவில்லை.

    இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்ற மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளார்கள்.

    எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் மனம் கலங்கமாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆகவே, நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்து, என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரை கொண்டு அந்த பாதையில் நான் பயணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எட்டு நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது.
    • வெற்றி துரைசாமி உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

    சுற்றுலா முடிந்து திரும்பும் போது, இவர் பயணம் செய்த கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    நதியில் 5 கி.மீ. தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டு இருந்த வெற்றி துரைசாமியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    பிறகு, அங்கிருந்து இன்று பிற்பகலில் சென்னை கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மட்டுமின்றி வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, வைகோ, சசிகலா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
    • மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

    வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.

    மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • வெற்றி துரைசாமியின் செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
    • சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான இரங்கல்.

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
    • அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.

    வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிப்பு.
    • உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

    கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    • காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியை காணவில்லை.
    • வெற்றி துரைசாமி குடும்பத்தாரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய திட்டம்.

    முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். இவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் (35) சென்றிருந்தார்.

    கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்று துரைசாமி வாடகை காரில் விமான நிலையம் புறப்பட்டார். கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    இந்த விபத்தில் ஓட்டுனர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். எனினும், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியை காணவில்லை. இவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    வெற்றி துரைசாமி மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதோடு வெற்றி துரைசாமியின் குடும்த்தாரிடம் இன்று டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    இந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடியாது என ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் வெற்றி துரைசாமி குடும்பத்தாரிடம் டி.என்.ஏ. பரிசோதனை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.
    • சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத் (35) என்பவருடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

    அவர்கள், சென்னை திரும்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சிம்லா விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்தபோது பாறை ஒன்று உருண்டு வந்து மோதியது. இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளதாக்கு பகுதியில் விழுந்ததோடு, அருகில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் கார் டிரைவர் தஞ்ஜின் காருக்குள் 'சீட் பெல்ட்' அணிந்தபடி இறந்து கிடந்தார். படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கோபிநாத் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காரில் பயணித்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய, திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருடன், உள்ளூர் மக்களும் இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

    இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. வெற்றி பயன்படுத்திய செல்போன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போன் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பாறை இடுக்குகளில் தேடுதல் பணி இன்று துரிதப்படுத்தப்பட்டது.

    நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், டிரோன் உதவியுடனும் தேடுதல் பணி நடக்கிறது. விபத்து நடந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் தேடுதல் பணியில் அடிக்கடி தொய்வு ஏற்பட்டது.

    இன்று (வியாழக்கிழமை) தேடுதல் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்த அவர்கள் அந்த நதி அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட இருக்கின்றனர். ஆனால் அந்த பணி மிகமிக சவாலாக இருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். மீட்புக் குழுவினருடன் சேர்ந்து அவர்களும் வெற்றியை தேடி வருகிறார்கள்.

    அவர்கள் அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களிடம் பேசி உதவி கேட்டுள்ளனர். மலைவாழ் மக்கள் உதவியுடனும் இன்று தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது.

    • காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை.
    • வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத்துடன் (35) சுற்றுலா சென்றார்.

    கடந்த 4-ந் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வாடகை காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

    கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    விபத்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிரைவர் தஞ்ஜின் காருக்குள் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். கோபிநாத் படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சீட் பெல்ட் அணிந்திருந்த அவர், காரை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால், அவரது செல்போன் சிக்னலை வைத்து சோதனை செய்தபோது, விபத்து நடந்த பகுதியிலேயே காட்டுகிறது. அதனால், சட்லஜ் நதி தண்ணீரில் அவர் அடித்துச்செல்லப்பட்டிருப்பார் என்று போலீசார் கருதினார்கள். உடனே, மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை நாடினார்கள். அவர்கள் வந்து படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    • சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
    • விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

    இவர் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பும்போது சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    காரில் பயணம் செய்த வெற்றி மாயமானார். அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர்.

    விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார்.
    • விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

    பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்.

    வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார்.

    கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் 200 அடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதியில் கார் பாய்ந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது டிரைவர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளத்தாக்கு பகுதியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

    விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    ×