search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loss"

    • விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
    • 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

    ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்ட்கார்லோ டென்னிசின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் பாபியோ போக்னினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #MonteCarlo #RafaelNadal #Fognini
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், உலகின் 18-ம் நிலை வீரரான இத்தாலி நாட்டை சேர்ந்த பாபியோ போக்னினிய்ம் மோதினர்.

    இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரபேல் நடால் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல் நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் துசான் லாஜோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் டேனில் மெட்விடெவை (ரஷியா) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #MonteCarlo #RafaelNadal #Fognini
    கோவை ஆவாரம்பாளையம் அருகே வாழைப்பழ வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த விரக்தியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தாய்-தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவரது மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர்.

    சவுந்தர்யா திருமணமாகி கணவருடன் காந்தி மாநகரில் வசித்து வருகிறார். நாகராஜூம், ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழை பழம் வியாபாரம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த நாகராஜ் ,அவரது மனைவி தேன்மொழி, மகன் ஆனந்தகுமார் ஆகியோர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். அப்போது சவுந்தர்யா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

    போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தாய் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த குமார் பரிதாபமாக இறந்தார்.

    நாகராஜ், தேன்மொழி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்தும் பீளமேடு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நாகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் வியாபாரத்துக்காக மொத்த வியாபாரிகள் சிலரிடம் கடனுக்கு பழங்களை வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நாகராஜ், தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #PetrolDieselPriceHike #CentralGovt
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அவற்றை குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    குறிப்பாக பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி எனும் வாட் வரியை மாநில அரசுகளும் கணிசமாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    இதையடுத்து பெட்ரோல்- டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வரிகள் விதிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு மிக குறைந்த விலையில்தான் பெட்ரோல்-டீசலை வினியோகம் செய்கின்றன.

    இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.39.21க்குதான் வழங்குகிறது. ஆனால் அந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலையை 2 மடங்கு அதிகரிக்க செய்து விடுகின்றன.

    மத்திய அரசு விதிக்கும் கலால் வரிப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.19.48 கிடைக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33ஐ மத்திய அரசு வருவாயாக பெறுகிறது. இந்த வரிக்கு பிறகு மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப வாட் வரியை விதிக்கின்றன.

    இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பையில் 33.12 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மிக குறைவாக 26 சதவீதம்தான் விதிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பெட்ரோல்- டீசல் மீது 32.16 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக கணக்கிட்டால் மாநில அரசுகள் சுமார் 30 சதவீதம் வாட் வரியை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கின்றன.

    இதனால்தான் கடந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருந்தது.

    பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் மிக எளிதாக வருவாய் வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றை இழக்க மனமில்லாமல் உள்ளன. மாநில அரசுகளை பொறுத்த வரை ராஜஸ்தான், ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தங்களது வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று வாட் வரியை குறைத்துள்ளன.

    ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை கலால் வரியை குறைக்க இயலாது என்று திட்டவட்டமாக 2 தடவை அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நிதி பற்றாக்குறையை குறைக்கும் இலக்கை நம்மால் எட்ட இயலாது.


    தற்போதைய பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணை உற்பத்தி குறைந்து போனதே முக்கிய காரணமாகும். எண்ணை வளம் மிக்க சில நாடுகள் தங்களது எண்ணை உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. அதன் தாக்கம்தான் தற்போது இந்தியாவில் எதிரொலித்துள்ளது.

    அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்து விட்டது. இந்த பிரச்சனைகள் இன்னும் சில தினங்களில் தானாக சரியாகி விடும்.

    இதற்காக கலால் வரியை குறைத்தால் அது மத்திய அரசின் நிர்வாக பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும்.

    அப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் போனால் அதுவும் மக்களைதான் பாதிக்கும். எனவேதான் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

    பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும். இது வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தபோது இத்தகைய முடிவைதான் அதிகாரிகள் எடுத்தோம். தற்போதும் அதே முடிவை தான் கையாண்டு உள்ளோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். #PetrolDieselPriceHike #CentralGovt
    மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவ்கதா ராய், தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதினால் பாஜக தோல்வியை மட்டுமே தழுவும் என தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

    இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.



    இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், சமீபத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.

    பொதுக்கூட்டங்களிலும், காணொளி காட்சிகள் மூலம் விவசாயிகள் பொதுமக்களுடன் மோடி உரையாடி வருவது அனைத்தும் கண் துடைப்புக்காக மட்டுமே எனவும் சவ்கதா ராய் குற்றம்சாட்டியுள்ளார். #NoConfidenceMotion
    நீலகிரி மலை ரெயிலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில்வேக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    புதுடெல்லி:

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    சென்னை:

    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகத்துக்கு சப்பாத்தி தயாரிக்கும் 9 நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை முழுமையாக செயல்படவில்லை. ஒப்பந்ததாரர் அதை சரி செய்யவில்லை. இதனால் ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


    சென்னை மாதவரத்தில் அனுமதி பெறாத தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி தகர்ப்பு கட்டணம் வசூலிக்கவில்லை. கட்டிடம் இடிக்கப்பட்டன. காலி மனை வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.

    சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    புதிய பஸ்களை தொடங்கி வைக்க ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 4357 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் 2020 புதிய பஸ்கள் குறித்த காலத்துக்குள் இயக்கப்படவில்லை.

    * முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் சுமார் 3 மாதங்கள் அந்த பஸ்கள் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வட்டியாக ரூ.10.29 கோடி வழங்கப்பட்டது.

    * புதிய பஸ்கள் தாமதம் காரணமாக எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பஸ்களை குறித்த காலத்துக்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னையில் உள்ள அரசு நிலங்களில் 23 சதவீத நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 சதவீதம் சென்னை குடிநீர் ஆதாரமாகத் திகழும் நீர்நிலைப் பகுதிகளில் இருக்கின்றன.

    * தமிழ்நாடு முழுவதும் 5.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதில் 65 ஆயிரத்து 411 ஏக்கர் இடங்களில் நிரந்தர குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்ய நடத்தப்படும் குழு கூட்டம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை.

    * சேலம் மாவட்டத்தில் 15.09 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 14.16 சதவீதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12.65 சதவீதம், திண்டுக்கல் மாவட்டத்தில் 11.85 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 11.14 சதவீதம், தர்மபுரி மாவட்டத்தில் 10.06 சதவீதம் அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட 5096 டன் கோதுமை அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது விதியை மீறியதாகும். இதனால் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு கோதுமை வழங்க இயலவில்லை.


    * சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுக்க 15 எந்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 13 எந்திரங்கள் பழுதாகி பயன்படுத்தப்படாமல் உள்ளன. 3 எந்திரங்கள் மூலமாகத்தான் சப்பாத்தி தயாரித்து வழங்கப்படுகிறது.

    * சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் சரியாக இல்லாததே வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

    * அனுமதி இல்லாத கட்டுமானங்கள், தனியார் நிலத்தை பாதுகாத்தது, அடையாறு ஆற்றுக்குள் வரைமுறை இல்லாமல் நீர் விடப்பட்டதும் வெள்ளம் ஏற்பட காரணமாகும். எனவே சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும்.

    * கூவம் ஆற்றை சீரமைக்க 2011-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்புதல் 2014-ல்தான் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை முடிக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டப்பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் 2018-ம் ஆண்டுக்குள் இதை முடிக்க இயலாத நிலை உள்ளது.

    * மின் பகிர்மான கழகம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவைக்கு அதிகமாக மருந்து, மாத்திரைகள் வாங்கப்பட்டதால் பல மருந்துகள் காலாவதியாகி விட்டன. இதனால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மூல உயிரணு ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2.70 கோடி தேவை இல்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான மானியம் ரூ.5.7 கோடி பெறப்படவில்லை.

    * தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் மூலம் 19,021 வாகனங்களில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7906 லாரிகள் போலி பதிவு எண் கொண்டவை என்று தெரிய வந்துள்ளன. 16,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் எடுத்த வகையில் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.10 கோடி கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

    * வெளிநாடுகளில் இருந்து கடந்த 3½ ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.1560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் சதுப்பு நில பாதுகாப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    * மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் நூலக வரியாக 6 சதவீதம் வரி வசூலிக்கிறது. அப்படி வசூலித்த 19 ஆயிரம் கோடி ரூபாய் நூலகத்துறைக்கு வழங்கப்படவில்லை.

    * கம்பம், நாகர்கோவில், வெள்ளக்கோவில் ஆகிய 3 நகராட்சிகளிலும் திட்ட பணிகள் முடிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால் ரூ.37.43 கோடி மானிய உதவித் தொகை பறிபோய் உள்ளது.

    * பதிவுத்துறையில் வழி காட்டி மதிப்பு குளறுபடி காரணமாக அரசுக்கு ரூ.13.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கல்லூரிகளுக்கு தளவாட பொருட்கள் வாங்கியதில் ரூ.14 கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    * சென்னைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 23 கோடி ரூபாயை வீணாக செலவு செய்துள்ளது.

    * தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. செய்த தாமதத்தால் ரூ.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * வணிக வரித்துறைக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * மொத்தத்தில் தமிழக அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa
    தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லாததால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    சென்னை:

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் இந்திய அணு மின்கழகத்தின் நிர்வாகத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

    முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 60 நாட்கள் கூடங்குளம் அணு மின்நிலையம் மூடப்பட்டது.

    ஆனால் எரிபொருள் நிரப்புவதில் தன் சொந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் தகுதித்திறன், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்; அதாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப தேவையான தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தன்னிடம் இல்லை என்பதை இந்திய அணு மின் கழகம் தாமதமாக உணர்ந்தது.

    அதன்பின்னர் இந்திய அணுமின் கழகம், ரஷியாவில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்களை அனுப்பி வைப்பதற்கு மாஸ்கோவில் உள்ள ஏ.எஸ்.இ. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.

    ஆனால் இதற்கான செலவு 76 சதவீதம் அதிகமாக இருந்தது. கூடங்குளம் அணுமின்நிலையம் மூடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாலும், நேரம் இல்லாமல் போனதாலும் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் போனதால் அதிக செலவினத்தை இந்திய அணுமின் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    மேலும் குறிப்பிட்ட 60 நாட்களுக்கு பதிலாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை 222 நாட்கள் மூட வேண்டியதாகி விட்டது.

    இதில் இந்திய அணு மின்கழகம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல்கள், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. 
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும். #StuttgartOpen
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.#FrenchOpen
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 2-6, 6-3, 6-4, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் குல்லெர்மோ கார்சியா லோபெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பன் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலை சேர்ந்த தகுதி சுற்று வீரர் ரோஜரியோ டுத்ரா சில்வாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீரர் இல்வா இவாஷ்காவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7-2), 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டானில்லா காலின்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 3-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பராகுவே வீராங்கனை வெரோனிசியாவை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா 6-2, 7-5 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் சோபியா கெனினை சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 5-7, 5-7 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீராங்கனை காதெரினா சினியாகோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். #FrenchOpen
    ×