என் மலர்

    நீங்கள் தேடியது "dealer suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே மனைவி-மகள்களை கொன்ற வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே சின்னமனூர் போலீஸ் சரகம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பர்னிச்சர் விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி ஜமுனா (வயது 35). இவர்களுக்கு ஐஸ்வர்யா (17), அபிலாசா (11) ஆகிய மகள்கள் இருந்தனர்.

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2 மகள்களையும் கழுத்தை நெறித்து கொன்றார். வேலைக்கு சென்று திரும்பிய மனைவி ஜமுனாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் முருகன் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றபோது அவரது தம்பி கண்ணன் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன் பின்னர் முருகன் உயிர் பிழைத்தார். மனைவி, 2 மகள்களை கொன்ற குற்றத்துக்காக உத்தம பாளையம் போலீசார் முருகனை கைது செய்தனர்.

    கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். சின்னமனூரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முருகன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

    அருகில் மது, வி‌ஷ பாட்டில் இருந்தது. எனவே முருகன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் அயூப்கான் (வயது 48), இரும்பு வியாபாரி. இவருக்கு ஹரினா பேகம், பரக்கத் நிஷா என 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர்.

    2 மனைவிகளும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று பரக்கத் நிஷா, கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

    இன்று காலை அவர் வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பரக்கத் நிஷா, அங்கு கணவர் அயூப்கான் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடந்த சில நாட்களாக அயூப்கான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை ஆவாரம்பாளையம் அருகே வாழைப்பழ வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த விரக்தியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தாய்-தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவரது மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர்.

    சவுந்தர்யா திருமணமாகி கணவருடன் காந்தி மாநகரில் வசித்து வருகிறார். நாகராஜூம், ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழை பழம் வியாபாரம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த நாகராஜ் ,அவரது மனைவி தேன்மொழி, மகன் ஆனந்தகுமார் ஆகியோர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். அப்போது சவுந்தர்யா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

    போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தாய் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த குமார் பரிதாபமாக இறந்தார்.

    நாகராஜ், தேன்மொழி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்தும் பீளமேடு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நாகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் வியாபாரத்துக்காக மொத்த வியாபாரிகள் சிலரிடம் கடனுக்கு பழங்களை வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நாகராஜ், தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
    ×