என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில் வியாபாரி தற்கொலை
பேரையூர்:
திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் அயூப்கான் (வயது 48), இரும்பு வியாபாரி. இவருக்கு ஹரினா பேகம், பரக்கத் நிஷா என 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர்.
2 மனைவிகளும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று பரக்கத் நிஷா, கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
இன்று காலை அவர் வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பரக்கத் நிஷா, அங்கு கணவர் அயூப்கான் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடந்த சில நாட்களாக அயூப்கான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்