என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Land"
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
- போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த 1998 இல் அசோகன், சண்முகம், தியாகராஜன், நவக்குமார், ரத்தினகுமார், துரைசாமி, மூர்த்தி, பாலசுப்பிரமணி, பழனியாண்டி கோபால், நரசிம்மன், பாப்பாயி ஆகிய 12 பேர் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
அப்போது பரமத்தியை சேர்ந்த 4 நபர்கள் தனக்கு இந்த இடத்தில் உரிமை உள்ளது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 24 ஆண்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
கடந்த ஜூலை 24 -ந்தேதி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தாமாக கொடுத்த நிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான என தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பதிவாளரிடம் பரமத்தி சேர்ந்த கார்த்தி கேயன் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த இடத்தில் தனக்கு சொந்தமென போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.
இந்த மனுவை நாமக்கல் மாவட்ட பதிவாளர் சந்தானம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் தவறான சந்ததிகளை தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மேற்படி நான்கு பத்திர பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட மேற்கண்ட ஆவணங்களை கொண்டு ஆவணங்கள் ஏதேனும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் பதிவுக்கு அனுமதிக்காமல் ஆவணத்தை மறுத்தலிப்பு செய்ய சார் பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது.
மேலும் புகாருக்கு உண்டான ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் மீது பதிவுச் சட்டம் 63 கீழ் நடவடிக்கை எடுத்து காவல்துறையினிடம் புகார் செய்து குற்ற வழக்கு தொடர பரமத்தி சார்பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது.
- வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
கடலூர்:
என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 192 காலியிட ங்களுக்கான ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது. முதன்முறையாக, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆட்சேர்ப்பு தேர்வில் 20 சலுகை மதிப்பெண்களை என்.எல்.சி. அறிவித்தது. இந்த வகையில் ஆட்சேர்ப்புச் சலுகை மதிப்பெண் காரணமாக, நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, நெய்வேலி சுரங்கங்களுக்காக நிலம் கொடுத்து பாதிக்க ப்பட்ட 39 பேர், ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர்களும் என்.எல்.சி . நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்த, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 39 பேர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படு த்தியதோடு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இத் தகவலை என்.எல்.சி. மக்கள் மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் தெரிவித்துள்ளார்.
- உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
சேலம்:
சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கூறியதாவது,
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 56 சென்ட் நிலம் உள்ளது. எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
இது குறித்து கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து எங்களை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதால் எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் நட வடிக்கை எடுக்க மாட்டார்கள் என மிரட்டுகிறார்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அறங்காவலர் குழுவினர் புகார்
- அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் இருந்தது.
கோவில் நிலத்தை ஒரு கும்பல் போலி பத்திரம் மூலம் பதிவு செய்து வீட்டுமனைகளாக மாற்றி விற்றுவிட்டனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் போலி பத்திரம் மூலம் கோவில் நிலம் விற்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சார்பதிவாளர் சிவசாமி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலமும் அபகரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கோவில் அறங்காவலர் குழுவினர் இந்து அறநிலையத்துறை மற்றும் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடம் வில்லியனூர் பைபாஸ் 4 முனை ரோடு சந்திப்பில் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் வாங்கியது. அப்போது வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் நாயக்கர் என்பவர் 3 போகம் பயிர் செய்து கோவில் நிர்வாகத்திற்கு குத்தகை கொடுத்து வந்தார். அவருக்கு வயதான கா ரணத்தினால் அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டார்.
அந்த இடம் எதற்கும் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை சுற்றி பல்வேறு நகர்கள் உருவாகி விட்டன. தற்போது அந்த இடம் காலியாக இருப்பதால் ஒரு கும்பல் 15 ஆண்டாக ஆக்கிரமித்து தனது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள ரூ.4 கோடி மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை, வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
- மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம் பாளையம், வெட்டுக் காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங் களில் மழை நீர் சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாகச் சென்று ராஜா வாய்க்காலில் கலந்து விடும். மழை அதிகமாக பெய்யும் போது அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கும். பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் சென்று பார்வை யிட்டார். பின்னர், உடனடி யாக ஆக்கிரப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.
அந்த நோட்டீஸில், வேலூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சுல்தான் பேட்டை பகுதியில் ஓடை புறம்போக்கு இடத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மண் கொட்டி உள்ள இடத்தில் கட்டிட பணி துவங்க ஏதுவாக ஏற்பாடு செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்ததில், சாலை மட்டத்திற்கு மேல் மண் கொட்டப்பட்டு உள்ளது என தெரிய வருகிறது.
இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள் மண் மேட்டினை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்துக்கு கீழ் உள்ளவாறு சீர் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அவ்விடத்தை சரி செய்ய தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது
- கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியவடகரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் உதவி ஆணையர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் சர்வேயர் கண்ணதாசன், வக்கீல், விஏஒ மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
- 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 48) .இவர் கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இதில் சுமார் 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாகவும், கொரோனா காலகட்டத்தில் சரியாக வியாபாரம் நடக்காததால் பணத்தை திருப்பி கட்ட முடியாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வங்கி நிர்வாகத்தினர் நிலத்தை கையகப்படுத்த வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தனபால் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த, திருப்பூர் மாவட்ட போலீஸ் இணை சூப்பிரண்டு முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் இருதரப்பினிடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஆவணங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
- கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்.
- இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கோணமடுவு, குரால்நத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
காவல்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு குப்புசாமி கூறியதாவது:-
கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.
இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாமல், வாழ முடியாமல் தவித்து வருகிறோம். நாகராஜ் என்பவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
இது குறித்து பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
- தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.
அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.
- தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
- நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்