search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deatg"

    • நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
    • தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.

    அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×