search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala High Court"

    • காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது.

    இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இந்த மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது

    • பள்ளியில் அளித்த ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி கூறியிருக்கிறார்.
    • சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், மாணவியின் தந்தையை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 

    வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. #KeralaHighCourt #BankAccount
    கொச்சி:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, வாடிக்கையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், அம்மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிக்கிறது. எனவே, அவரது நலன்களை பாதுகாப்பது வங்கியின் கடமை. அவரது கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும். வங்கிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வங்கிகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி உஷார்படுத்தினாலும், அதை வைத்து தப்பித்துக்கொள்ள முடியாது.

    இவ்வாறு நீதிபதி கூறினார். #KeralaHighCourt #BankAccount 
    தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணமாகவும் செல்வார்கள்.

    தற்போது சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.



    வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. #KeralaHC


    சபரிமலை பற்றி அவதூறு பரப்பியதால் கைதான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima
    திருவனந்தபுரம்:

    பி.எஸ்.என்.எல். ஊழியரும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா சபரிமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா போலீசார் அவரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.

    கைதான ரெஹானா பாத்திமாவின் ஜாமீன் மனுவை பத்தினம் திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இன்று ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கியது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima

    சபரிமலையில் ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர். #Sabarimala #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

      சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.

    இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.  #Sabarimala #KeralaHC


    சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு சொல்லக்கூடாது என்று போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு விளக்கம் கேட்டுள்ளது. #KeralaHC #SabarimalaTemple
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், ஐயப்பன் கோவில் போராட்ட களமாக மாறியது. அதை தடுக்க கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள மாநில அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று அந்தமனுக்கள், நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவிலில் பக்தர்களுக்கு வசதி செய்து தருமாறு தாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், தடை உத்தரவு பிறப்பித்த கேரள அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று சரண கோஷம் எழுப்புவதில் தவறு இல்லை. சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு போலீசார் சொல்லக்கூடாது. கோவிலுக்கு குழுவாக செல்லலாம்.



    கோவிலுக்கு வருபவர்களில் உண்மையான பக்தர்களையும், போராட்டக்காரர்களையும் போலீசார் எப்படி வேறுபடுத்தி பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

    சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கான சூழ்நிலை பற்றி கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது பற்றி பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். சன்னிதானத்தில் கட்டுப்பாடுகள் விதித்தது பற்றி கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    நடைப்பந்தலில் என்ன நடந்தது என்பது பற்றிய வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த எத்தனை போலீசார் பணி அமர்த்தப்பட்டனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு, குற்றப்பின்னணி கொண்ட போலீஸ் ஐ.ஜி.யையும், சூப்பிரண்டையும் அனுப்பியது யார்? அவர்களுக்கு மலையாளம் தெரியுமா? ‘சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்தை அவர்கள் ஏன் குற்றமாக கருதுகிறார்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர். #KeralaHC #SabarimalaTemple

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்தது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #SabarimalaProtest #KeralaHighCourt #Police
    கொச்சி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதை ஏற்காத நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.



    அவர்கள் கூறியதாவது:-

    எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். நெய் அபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்த பக்தர்கள், இரவில் தங்கி இருந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி நடக்கிறது. 
    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

    மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.



    வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

    சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.



    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. #KeralaHC #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனாலும் சபரிமலை கோவில் நடை திறக்கும்போதெல்லாம் அங்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை அவர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே மோதலும் உருவாகிறது.

    இந்த நிலையில் சபரிமலையில் போராட்டம் நடத்தியதாக திருப்புனித்துராவை சேர்ந்த கோவிந்த் மதுசுதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர், தனக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். போலீஸ் சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுசுதன் போராட்டம் நடத்திய காட்சி அடங்கிய வீடியோ பதிவையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ஐகோர்ட்டு மதுசுதனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும் நீதிபதி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. சபரிமலையில் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றார். #KeralaHC #Sabarimala
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

    அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில பகுதிகளில் இந்து அமைப்பினரால் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

    சில செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஒருதரப்பினர் தாக்கி வாகனங்களுக்குள் சிறைபிடித்து வைத்ததாக செய்திகள் வெளியாகின.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.

    இதற்கிடையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்க நிறுவனங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

    இதைதொடர்ந்து, பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வந்தால் சன்னதியை மூடுவோம் என மேல்சாந்திகள் எச்சரித்துள்ளனர். பம்பா மற்றும் நிலக்கல் பகுதி வழியாக வரும் வாகனங்களை நேற்றிலிருந்து போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

    சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சபரிமலை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது என கேரள ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஐயப்பன் கோவிலின் அன்றாட விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது. வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt 
    ×