search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala protests"

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்தது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #SabarimalaProtest #KeralaHighCourt #Police
    கொச்சி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதை ஏற்காத நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.



    அவர்கள் கூறியதாவது:-

    எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். நெய் அபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்த பக்தர்கள், இரவில் தங்கி இருந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி நடக்கிறது. 
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. #KeralaHC #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனாலும் சபரிமலை கோவில் நடை திறக்கும்போதெல்லாம் அங்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை அவர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே மோதலும் உருவாகிறது.

    இந்த நிலையில் சபரிமலையில் போராட்டம் நடத்தியதாக திருப்புனித்துராவை சேர்ந்த கோவிந்த் மதுசுதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர், தனக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். போலீஸ் சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுசுதன் போராட்டம் நடத்திய காட்சி அடங்கிய வீடியோ பதிவையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ஐகோர்ட்டு மதுசுதனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும் நீதிபதி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. சபரிமலையில் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றார். #KeralaHC #Sabarimala
    பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Sivakumar #Sabarimala
    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். 

    பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. 

    இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்’.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். #Sabarimala #SabarimalaProtests
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.  

    இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.



    இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Sabarimala #SabarimalaProtests

    சபரிமலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
    புதுடெல்லி:

    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் இப்போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர்.

    ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை போராட்டக் குழுவினர் தடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடைபெறும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
    பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல என கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister
    பத்தனம்திட்டா:

    சபரிமலை தீர்ப்புக்கு வலுத்து வரும் எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெகானா என இரண்டு பெண்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

    இதுபற்றி தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பெண்ணியவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.



    இன்று கோவிலுக்கு வந்த பெண்களின் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. பெண்ணியத்தை நிரூபிக்கவோ, போராட்டம் நடத்தவோ சபரிமலை உகந்த இடம் அல்ல. பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து பிரச்சினை ஏற்படுத்த மாட்டார்கள் என ஐஜி தெரிவித்தார். #Sabarimala #SabarimalaProtests #KeralaIG
    பத்தனம்திட்டா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் வலுவடைந்தது.  தீர்ப்பை சுட்டிக்காட்டி சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இந்நிலையில் கோவிலுக்குள் எப்படியும் நுழைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்று புறப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவிதா உள்ளிட்ட இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் இன்று சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரலாம், ஆனால் பெண்ணியவாதிக்கு பாதுகாப்பு தர முடியாது என அரசு தெரிவித்துள்ளது.



    போராட்டம் நடத்திய பக்தர்களுடன் ஐஜி ஸ்ரீஜித், பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், சபரிமலையில் காவல்துறையினர் பிரச்சினையை ஏற்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

    ‘பக்தர்களுடனான மோதல் எங்களுக்குத் தேவையில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் எங்கள் கடமை. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார் ஐஜி. #Sabarimala #SabarimalaProtests #KeralaIG
    ×