search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakadu"

    • சுசிலா மூகாம்பிகை களக்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தனது தோழியுடன்,சுசிலா மூகாம்பிகை மீண்டும் செல்போனில் பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழச்சாலைபுதூரை சேர்ந்தவர் ராஜபூலோக பாண்டியன். இவரது மகள் சுசிலா மூகாம்பிகை (வயது15). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுசிலா மூகாம்பிகை, தனது தோழியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். நேற்று மாலை மீண்டும் அவர் தனது தோழியுடன் செல்போனில் பேசினார்.

    இதைப்பார்த்த அவரது தாயார் அவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த சுசிலா மூகாம்பிகை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆறுமுகம் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக கனகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தெற்கு அப்பர்குளத்தை சேர்ந்த கனகராஜ் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னம்மாள் களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
    • பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பொன்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் களக்காடு செல்வதற்காக படலையார்குளம் மின்சார வாரிய அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் இருந்து களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். களக்காட்டிற்கு சென்று பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் எடையுள்ள தங்க செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை பறித்து சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
    • கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

    கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஸ்டீபன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதனைதொடர்ந்து ஸ்டீபன்ராஜ் தலைமறை வானார்.

    இந்நிலையில் நேற்று அவர் மூங்கிலடி குளக்கரை யில் உள்ள அத்திமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்ப ட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன்ரா ஜூக்கு மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    • இசக்கிமுத்து நேற்று ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த பரமசிவன், இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன் குளத்தை சேர்ந்த பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ. 150-ஐ பறித்து சென்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை தேடி வருகிறார்.

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் தெற்கு வள்ளியூர் அருகே உள்ள மேல கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசூர்யா (வயது 20) என்பதும், தப்பி ஓடியது நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற செல்லையா மகன் அருள்நம்பி (23) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலசூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருள்நம்பியை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
    • மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இருந்து மாட்டு சாணம் உரம் ஏற்றி கொண்டு ஒரு மினிலாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த ஜெனிஸ்குமார் (வயது 43) ஓட்டி சென்றார்.

    மினிலாரியில் தொழிலாளர்கள் ஆலங்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60), கணபதிபுரம் அருகே உள்ள புதுமடத்தையை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகியோர் இருந்தனர். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மினிலாரியில் மோதியது. இதில் மினிலாரி தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதுபோல மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் ஜெனிஸ்குமார், தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்த யுகேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஜெனிஸ்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பால கிருஷ்ணன் ராஜாக்கள் மங்களம் தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவில்பத்து ஜோதி நகரை சேர்ந்த இளங்கோ (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
    • இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி முனைஞ்சி பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுடலைமுத்து கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
    • திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுடலைமுத்து (வயது63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. மர்ம நபர்கள் ஆடு களை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடு கள் திருடிய மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

    • சிவகுமார் ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர உள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது47). தொழிலாளி. இவர் சம்ப வத்தன்று களக்காட்டிற்கு வந்து விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டி ருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர முள்ள மின் கம்பத்தில் மோ ட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரம்மாள் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூரை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சங்கரம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லெட்சுமி காந்தன், சங்கரம்மாளை கீழே தள்ளி தாக்கினார். இதனால் காயமடைந்த சங்கரம்மாள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மூதாட்டியை தாக்கிய லெட்சுமி காந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.

    களக்காடு :

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

    ×