search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தூக்கு போட்டு  மாணவி தற்கொலை
    X

    களக்காடு அருகே தூக்கு போட்டு மாணவி தற்கொலை

    • சுசிலா மூகாம்பிகை களக்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தனது தோழியுடன்,சுசிலா மூகாம்பிகை மீண்டும் செல்போனில் பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழச்சாலைபுதூரை சேர்ந்தவர் ராஜபூலோக பாண்டியன். இவரது மகள் சுசிலா மூகாம்பிகை (வயது15). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுசிலா மூகாம்பிகை, தனது தோழியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். நேற்று மாலை மீண்டும் அவர் தனது தோழியுடன் செல்போனில் பேசினார்.

    இதைப்பார்த்த அவரது தாயார் அவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த சுசிலா மூகாம்பிகை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×