search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே கார் மோதியதால் சாலையில் கவிழ்ந்த மினி லாரி - 4 பேர் படுகாயம்
    X

    நாங்குநேரி அருகே கார் மோதியதால் சாலையில் கவிழ்ந்த மினி லாரி - 4 பேர் படுகாயம்

    • நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
    • மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இருந்து மாட்டு சாணம் உரம் ஏற்றி கொண்டு ஒரு மினிலாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த ஜெனிஸ்குமார் (வயது 43) ஓட்டி சென்றார்.

    மினிலாரியில் தொழிலாளர்கள் ஆலங்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60), கணபதிபுரம் அருகே உள்ள புதுமடத்தையை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகியோர் இருந்தனர். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மினிலாரியில் மோதியது. இதில் மினிலாரி தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதுபோல மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் ஜெனிஸ்குமார், தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்த யுகேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஜெனிஸ்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பால கிருஷ்ணன் ராஜாக்கள் மங்களம் தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவில்பத்து ஜோதி நகரை சேர்ந்த இளங்கோ (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×