search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தம்பியை வெட்டிய அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    களக்காடு அருகே தம்பியை வெட்டிய அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
    • கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது44). தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

    கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், தம்பி செல்வகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஸ்டீபன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதனைதொடர்ந்து ஸ்டீபன்ராஜ் தலைமறை வானார்.

    இந்நிலையில் நேற்று அவர் மூங்கிலடி குளக்கரை யில் உள்ள அத்திமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்ப ட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன்ரா ஜூக்கு மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×