search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே மூதாட்டி மீது தாக்குதல்
    X

    நாங்குநேரி அருகே மூதாட்டி மீது தாக்குதல்

    • சங்கரம்மாள் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூரை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சங்கரம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லெட்சுமி காந்தன், சங்கரம்மாளை கீழே தள்ளி தாக்கினார். இதனால் காயமடைந்த சங்கரம்மாள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மூதாட்டியை தாக்கிய லெட்சுமி காந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×