என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்24 Sep 2023 9:27 AM GMT
- பொன்னம்மாள் களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
- பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பொன்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் களக்காடு செல்வதற்காக படலையார்குளம் மின்சார வாரிய அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் இருந்து களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். களக்காட்டிற்கு சென்று பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் எடையுள்ள தங்க செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை பறித்து சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X