search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
    X

    களக்காடு அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

    • பொன்னம்மாள் களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
    • பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பொன்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் களக்காடு செல்வதற்காக படலையார்குளம் மின்சார வாரிய அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் இருந்து களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். களக்காட்டிற்கு சென்று பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் எடையுள்ள தங்க செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை பறித்து சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×