என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "intimidation"
- முத்துக்குமார் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
- இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திரும்ப கொடுக்க வில்லை. இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு முத்துக்குமார் பணம் தற்போது இல்லை, ஆனால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆனந்த், புதுபேட்டை அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மகாராஜன் (20), புதுபேட்டை செக்கடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கேசவன் (23) ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி முத்துக்குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றார்.
- பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
- இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.
ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,
கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.
- லாரிகளை நிறுத்தி பணம்கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் குமரனை கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக் குட்பட்ட அனகாபுத்தூர் இ.பி. காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்கான மாநகராட்சி ஒப்பந்தத்தை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்று செய்து வருகிறது. இதற்காக அனகாபுத்தூர் பக்தவச்சலம் தெரு வழியாக லாரிகளில் கான்கிரீட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சித்ரா என்பவரது கணவர் தமிழ்குமரன் மாநகராட்சி ஒப்பந்தப்பணிக்கு சென்ற லாரிகளை நிறுத்தி பணம்கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன், சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் குமரனை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
- தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேருராட்சி தலைவராக இருப்பவர் பாக்யலட்சுமி. (திமுக) இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. கடம்பூர் கிராமத்தில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே தனியார் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடம்பூரை சேர்ந்த 3 பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமியை அவரது வீட்டிற்கே சென்று திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடம்பூரில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே வீடுகள் கட்ட மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதால் மேற்கண்ட மனைப்பிரிவிற்கு அனுமதிதரவில்லை.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன், தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய 3 பேர் எனது வீட்டிற்கு கம்பு, கல் ஆகியவற்றுடன் வந்து என்னை ஜாதியை சொல்லி திட்டி, தகாதவார்த்தைகளால் அசிங்கமாக பேசினர்.
ஜாதியை சொல்லி திட்டாதீர்கள் என கூறிய என் கணவர் செங்குட்டுவனையும் தாக்க முயன்றனர். நாளைக்குள் மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே ஜாதிபெயரை சொல்லி அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்த மூன்றுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.
- மது போதையில் பெண்ணை மிரட்டிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி புஷ்பவல்லி. இவரது மகள் பள்ளி முடிந்து செம்பூர் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது அரசனூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கோகுல் ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று சிறுமியின் முதுகில் அடித்துள்ளார்.
இது பற்றி அவரது தாயார் கேட்டபோது கோகுல்ராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் மனைவி ராஜலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஊமச்சிகுளத்தில் உள்ள வீட்டின் சாவியை கேட்டு முருகப்பன் மனைவி ராஜலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசில் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேக்உதுமான் துபாயில் இருப்பதால் குடும்பத்தினர் மூலம் தான் கொடுத்த பணத்தை அப்துல் வகாப்பிடம் திருப்பி கேட்டுள்ளார்.
- தப்பிய கவுன்சிலர் அப்துல் வகாப் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல்வகாப். இவர் கடையநல்லூர் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவர் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றதாக கடையநல்லூர் போலீசில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடையநல்லூரை சேர்ந்தவர் சேக் உதுமான்.
இவர் தற்போது துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் வீட்டுமனை வாங்கித் தருவதாக கவுன்சிலர் அப்துல்வகாப் ரூ. 52 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேக்உதுமான் துபாயில் இருப்பதால் குடும்பத்தினர் மூலம் தான் கொடுத்த பணத்தை அப்துல் வகாப்பிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேக் உதுமான், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் அப்துல் வகாப்பிடம் இருந்து பணத்தை வாங்கித் தர கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்துல் வகாப் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அச்சம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் (வயது 36), தென்காசி சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வம் (42), செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் விவேக்(30), செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி இளையராஜா(34) ஆகியோர் அப்துல் வகாப்பிடம் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய கவுன்சிலர் அப்துல் வகாப் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் துபாயில் இருக்கும் சேக் உதுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திரன், செல்வம், விவேக், இளையராஜா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
- டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.
- வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), கீழ அலங்கம் சிவக்குமார் (25), வடக்குவாசல் சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவப்படி, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
- போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வெங்கடேசுக்கு ''ஹலோ போலீஸ்'' கொடுத்த தகவல் மூலம் அங்கு வந்தார். அவர் தம்பதியினரிடம் சண்டை போட வேண்டாம், போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கு ஆனந்தராஜ் எங்க குடும்ப பிரச்சினையில் தலையிட நீ யாருடா? என்று தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் இங்கிருந்து செல்லா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வெங்கடேஷ் கமுதி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தராஜை கைது செய்தனர்.
- பெண்ணின் காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுத்த மைத்துனர், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது53). இவரது மகளும், தங்கை மகன் ஆனந்த்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ஆனந்த்துடன் பழகுவதை சுப்பிரமணியனின் மகள் நிறுத்திவிட்டார்.
இந்தநிலையில் சுப்பிரமணியன், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதையறிந்த ஆனந்த் ஆபாச போட்டோக்களை அனுப்பி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார். ஆனால் அவரும் ஆனந்த்துக்குதான் சுப்பிரமணியனின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினாராம்.
இதுகுறித்து சுப்பிரமணியன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் -புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்