search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pornography"

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    போரூரில் பிரபல ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் வாலிபர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

    மேலும் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிடப்பட்டு இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவிந்து கிடந்தது. இதேபோல் தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்து உள்ளார். இளம்பெண் சாட்டிங் செய்வது போல் வாலிபர்களை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது போலீசில் சிக்கி கொண்டார்.

    தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    ஆபாச சாட்டிங் செய்து அவரது வலையில் வீழ்ந்தவர்களிடம் பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
    • மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாத்தை சேர்ந்த மாணவர் ராமானந்தபூரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். சிறுமிகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்தார்.

    மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.

    மாணவனின் இந்த செயல்களை அமெரிக்காவில் உள்ள சிறுவர் ஆபாச பதிவிறக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்தது.

    மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்நாட்டு நோடல் ஏஜென்சி மூலம் இந்தியாவில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாணவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தெலுங்கானா மாநில போலீசாருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு அனுப்பிய மாணவரின் தகவல்களை அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தெலுங்கானா போலீசார் மாணவனின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.

    இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.

    • மதுரையில் முகநூல் பக்கத்தில் இளம்பெண் படத்துடன் ஆபாசமாக பதிவிடப்பட்டது.
    • இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெத்தானியபுரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவியும் சமூக சேவகியுமான முத்துலட்சுமி (வயது 34), மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை தொடங்கி ஆதரவற்ற முதியோர் மற்றும் ஏழை எளியோருக்கு தினமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தேன். இதற்காக எனது முகநூல் பக்கத்தில் அன்னதானத்திற்கு நன்கொடை வேண்டி, தொலைபேசி எண்ணை பதிவிட்டு இருந்தேன்.

    அப்போது கத்தாரில் இருந்து மாரிச்சாமி கோசாலை என்பவர் என்னை தொடர்பு கொண்டு "எனது மகன் பிறந்த நாள் அன்று அன்னதானம் வழங்குங்கள்" என்று கூறி, எனது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தினார். அதன்படி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மதுரை திரும்பிய மாரிச்சாமி, என் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்து சென்றார். இதற்கிடையே மாரிச்சாமியின் மனைவி வினிதாராஜி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் என் கணவருடன் பேசுவது பிடிக்கவில்லை என்று கூறினார். எனவே நான் மாரிச்சாமியின் போன் நம்பரை பிளாக் செய்து விட்டேன். அதன் பிறகும் வினிதாராஜி என்னிடம், என் கணவரை ஏமாற்றி எவ்வளவு பணம் வாங்கினாய்? என்று அசிங்கமான வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் எனக்கு நள்ளிரவு நேரங்களில் புதுப்புது எண்களிலிருந்து அழைப்பு வரத் தொடங்கியது. எதிர் முனையில் பேசியவர்கள், 'ஒரு இரவுக்கு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? இந்த போட்டோவில் உள்ள மாதிரி இருப்பாயா? அல்லது சிறு வயது போட்டோவா?' என்று கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தினர். நான் அந்த போன் நம்பர்களை பிளாக் செய்தேன்.

    அதன் பிறகு 60-க்கும் மேற்பட்ட போன் நம்பரில் இருந்து போன் வந்தது. இந்த நிலையில் ஒரு பெண் எனக்கு போன் செய்து, 'உங்கள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்ணை டெலிகிராம் இணையதளத்தில் பதிவு செய்து, 'நீங்கள் விபச்சாரி' என்று யாரோ குறிப்பிட்டு உள்ளனர்' என்று தெரிவித்தார். அந்தப் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் தகவலையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

    என்னை இணையதளம் வாயிலாக விபச்சாரி என்று அவதூறு பதிவு செய்த வினிதா ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த புகார் மனு தொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்த தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    தனிப்படை போலீசார் அந்த இணையதளத்தில் பதிவான தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அது டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் செல்போன் நம்பர். அந்த எண்ணை இதற்கு முன்பு ராஜ் கோசாலை என்பவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் இது தொடர்பாக மாரிச்சாமி மனைவி வினிதாராஜி மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இணையம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஆபாசப் படங்கள் 800 கோடி அமெரிக்க டாலர் தொழிலாக உருவெடுத்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். #ChildSexualAbuse #KailashSatyarthi
    போபால்:

    இன்றைய நவீன காலங்களில் இணையம் ஒரு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக இணையம் என்பது குறித்த அடிப்படை புரிதல் இல்லாத இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தின் பாதிப்புகளை மட்டுமே அதிகம் அறுவடை செய்கிறார்கள்.

    மறுபுறம், சிறுவர்கள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர்களை கொண்டு எடுக்கப்படும் ஆபாச படங்களும் இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் நல ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி கூறியிருப்பதாவது:-

    ‘இணையதளம் மூலமான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆபாசப் படங்களை தடுக்க சர்வதேச அமைப்பிலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் ஆபாச படம், குழந்தைகள் கடத்தல் 800 கோடி டாலர் அளவிலான தொழிலாக உருவெடுத்துள்ளது. இவற்றைத் தடுக்க உலக அளவில் உறுதியான கண்காணிப்பு அமைப்பு இல்லை. அந்தந்த நாட்டு அரசுகள் இவற்றை ஆரம்ப நிலையிலேயே களைய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    இதுபோன்ற சமூக விரோத அமைப்புகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில், போலீசாரிடம் இன்னும் பழைய தொழில்நுட்பங்களே இருக்கின்றன. சர்வதேச அளவில் குழந்தைக் கடத்தல்காரர்கள் குறித்த விவர அறிக்கையை இண்டர்போல் அமைப்பும் உருவாக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #ChildSexualAbuse #KailashSatyarthi
    ×