search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian"

    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #IndiavsSriLanka
    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.

    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. #IndiavsSriLanka 
    ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. #UAElottery
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.

    இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.

    கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.

    கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery
    ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்தியரின் உடல் 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #UAE
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யூசுப் கான் ரஷித் கான் என்பவர் தான் தங்கியிருந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை மீட்டு, அவரது உறவினர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இறந்த யூசுப் கானின் உடலை பெற யாரும் முன்வராததால், அங்கு உள்ள இந்தியர்களின் சங்கத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். யூசுப் கானின் விசாவில் இருந்த இந்திய முகவரி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் அவரது உறவினர்கள் இல்லை. இதனால், 4 மாதங்களாக பிண அறையில் இறந்தவரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், அவரது பாஸ்போர்ட்டை வைத்து ஆராய்ந்ததில், யூசுப் கானின் உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவரது மரணம் குறித்து தகவல் அளிக்கப்பட்டனர். இந்த தகவலை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான பணம் எங்களிடம் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முழு செலவையும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூப் சித்து ஏற்றுக்கொண்ட நிலையில், இறந்தவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. #UAE
    அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. #US #India #TanishqAbraham
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வாழும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவர் தனது 15 வயதில் உயிரிமருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை துவக்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    மேலும், 15 வயது சிறுவன் தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். மேலும், பல புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #US #India #TanishqAbraham
    அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. #TojoMathew #UAEraffledraw
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவரது மனைவிக்கு சமீபத்தில் டெல்லியில் நர்சு வேலை கிடைத்தது.

    மனைவியை சந்திப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா புறப்பட்ட டோஜோ மேத்யூ, அபுதாபி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு நடத்தி வரும் மாதாந்திர ‘பிக் லாட்டரி’ பரிசு சீட்டை வாங்கினார்.

    இந்தியா வந்து சேர்ந்த பின்னர் ‘பிக் லாட்டரி’ இணையதளத்தை பார்வையிட்டபோது, நேற்று நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய்) தனக்கு கிடைத்துள்ளதை அறிந்து டோஜோ மேத்யூ, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்.

    இவரைத்தவிர, 5 இந்தியர்கள் உள்பட 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசாக  தலா ஒரு லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது.



    முன்னதாக, அபுதாபி லாட்டரி குலுக்கல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்தவர் 1.2 கோடி திர்ஹம்களை ஜாக்பாட் பரிசாக பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது கிடைத்துள்ள பரிசு தொகையின் மூலம் கேரளாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்னும் தனது நெடுங்கால கனவு பலித்துள்ளதாக டோஜோ மேத்யூ தெரிவித்துள்ளார். #TojoMathew  #UAEraffledraw
    கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். #KailashMansarovar #Pilgrims #NepalRescued
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.



    இதன் காரணமாக மானசரோவருக்கு சென்ற இந்திய பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேபாள நாட்டின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா என்னும் இடத்தில் 550 பேரும், திபெத்திய பகுதியில் 500 பக்தர்களும் என 1,500-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாக தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக புனித யாத்திரை மேற்கொண்ட வயதான ஆண்களும், பெண்களும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்திய பக்தர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்



    மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டவர்களை பத்திரமாக மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.

    அதில், நேபாளத்தில் சிக்கி பரிதவிக்கும் பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உதவிகள் வழங்க நேரடி தொலைபேசி வசதி(ஹாட்லைன்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஹாட்லைனில் தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. பிரணவ் கணேஷ்(முதன்மை செயலாளர்-தூதரக அதிகாரி), 977-9851107006, தமிழில் அறிந்து கொள்ள ஆர்.முருகன், 977-9808500642 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பக்தர்களை மீட்பது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது. யாத்திரை சென்ற பக்தர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.



    சிமிகோட்டில் தங்கியிருக்கும் வயதில் மூத்தோர் அனைவருக்கும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஹில்சா பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களை மாற்றுப்பாதைகளில் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த பாதைகள் அனைத்தும் சிமிகோட்-நேபாள்கஞ்ச் பாதையைப் போன்றே சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் ஹில்சா பகுதியில் மற்ற இடங்களை விட மிகவும் மோசமான வானிலை நிலவுவதால் இப்பகுதியில் இருந்து விரைவாக இந்திய பக்தர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சிமிகோட், ஹில்சா பகுதிகளில் நேற்றும் மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் இந்திய பக்தர்களை மீட்பது சற்று கடினம் என்று கருதப்பட்டது.

    எனினும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழர்களுடன் சிமிகோட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்ட ஒரு விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு நேபாள்கஞ்ச் வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அவர்கள் காரில் அழைத்து செல்லப்பட்டனர். காத்மாண்டுவில் சிறிது ஓய்வுக்கு பின்னர், அவர்கள் சாலைமார்க்கமாகவே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர். எனவே விரைவில் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மானசரோவருக்கு மாண்டியா, ராமநகரா, மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து 290 பேர் கைலாய யாத்திரை சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    நேபாளத்தில் தவிக்கும் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தனது மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகளை நேபாள்கஞ்ச் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன்(வயது 69) இந்த பயணத்தின்போது உயிர் இழந்தது, தெரிய வந்துள்ளது. இவர், தனது மனைவியுடன் மானசரோவருக்கு கடந்த மாதம் 18-ந்தேதி பயணம் மேற்கொண்டார்.

    நேற்று முன்தினம் மானசரோவரில் கிரிவலம் சென்றபோது கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமச்சந்திரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவரது உடல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா(வயது 56), ஆந்திராவின் சத்தியலட்சுமி ஆகிய 2 பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    லீலா, மானசரோவருக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியபோது இறந்துள்ளார். கேரளாவில் இருந்து யாத்திரை சென்ற 40 பேரில் இவரும் ஒருவர். ஆந்திர மாநிலத்தின் சத்திய லட்சுமி திபெத்திய பகுதியில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
     #KailashMansarovar #Pilgrims #NepalRescued #Tamilnews 
    இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலையில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலையில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் மக்கள் சராசரியாக 68.35 வயது வரை வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. ஆனால் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். 2000-ம் ஆண்டில் இந்தியாவில் 1,08,593 பேர் தற்கொலை செய்தனர்.

    2005-ம் ஆண்டு அது 1,13,914 ஆகவும், 2015-ல் 1,34,599 ஆகவும் அதிகரித்தது. தற்கொலையில் ஈடுபடுபவர்களில் 30 வயது முதல் 45 வயது வரையிலான நடுத்தர வயது உடையவர்கள்தான் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    2015-ம் ஆண்டு தற்கொலை செய்தவர்களில் 33 சதவீதம் பேர் நடுத்தர வயதுடையவர்கள் ஆவார்கள். அதுபோல 18 முதல் 30 வயது வரையிலானவர்கள் 32 சதவீதம் உயிரை மாய்த்துள்ளனர்.

    தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தற்கொலை செய்தவர்களில் சுமார் 42 ஆயிரம் பேர் பெண்கள் ஆவார்கள். ஆனால் அந்த ஆண்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை சுமார் 92 ஆயிரமாக இருந்தது.

    உலகம் முழுவதும் ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Indiansrescued #MEASushma
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை புதுடெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் உள்ள பல நாடுகளுக்கு நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். எங்கள் ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சியில் 
    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட பலரை பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள்.

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indiansrescued #MEASushma
    ×