search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி"

    • யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
    • திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.

    "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

    ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

    மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

    தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

    மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

    திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்.

    பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?

    இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

    அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

    'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?" என்று அவர் தெரிவித்துள்ளார்

    லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் தீவிர லாட்டரி, கஞ்சா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா தர்கா எதிரில் டீக்கடை நடத்தி வரும் அப்துல் மத்தின் ( வயது 48) என்பவரும், டீக்கடைஊழியர் பண்ருட்டிஆர். எஸ். மணி நகர்ஜோதி (வயது 49) ஆகிய இருவரும் நல்ல நேரம் லாட்டரி சீட்டு 10, குமரன் லாட்டரி சீட்டு 5,தங்கம் லாட்டரி சீட்டு 5 ஆகிய லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதே போல பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகில் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22),சையத் இப்ராஹிம் (வயது 33)ஆகிய இருவர்களும் நல்லநேரம் லாட்டரி சீட்டு 14, தங்கம் லாட்டரி சீட்டு 5,குமரன் லாட்டரி சீட் 10 ஆகிய லாட்டரி சீட்டு வைத்திருந்தவர்களை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
    • அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் லாட்டரி விற்றதாக உறையூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் கஞ்சா விற்றதாக தேவேந்திரன் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர் . அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது
    • ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அடிவார பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக திருச்சி ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது. இதனை அடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கீரம்பூர் கிராமத்தை ராஜ்குமார் (37) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த துறையூர் போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற பணம் ரூ. 550 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா,லாட்டரி, சூதாட்டம் :
    • திருச்சியில் 12 பேர் அதிரடி கைது


    திருச்சி


    திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்ன கொத்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


    அதேபோல் கோட்டை, தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஜெயக்குமார், அன்வர் பாஷா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், கே.கே.நகர்,தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்ற இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று கடந்த 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.




    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட கோழிகட்டானூர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
    • குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரித்துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசான ரூ.25 கோடி, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜன் உள்பட 4 பேர் வாங்கிய டிக்கெட்டுக்கு கிடைத்தது.

    இது உறுதி செய்யப்பட்ட நிலையில் பரிசு பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரிசுக்கான லாட்டரி சீட்டு பிளாக்கில் தமிழகத்தில் விற்கப்பட்டுள்ளது. அதனை தான் வாங்கி உள்ளனர். எனவே அவர்களுக்கு பரிசு தொகை வழங்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் பரிசு பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து கேரள லாட்டரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சட்டப்படி கேரள லாட்டரியை மற்ற மாநிலங்களில் விற்க முடியாது. பரிசு வென்றவர் கேரளா வருவதற்கான காரணங்களும் சரிபார்க்கப்படும். பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

    லாட்டரி துறை இணை இயக்குநர், நிதி அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கொண்ட சிறப்பு குழு விசாரணை நடத்திய பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும். தற்போது பம்பர் லாட்டரி பரிசுச்சீட்டு குறித்து புகார் வந்துள்ளதால், இந்த குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாதம் ரூ.10 லட்சம் வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
    • பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லாட்டரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லாட்டரி சீட்டில் மெகா பம்பர் பரிசாக ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்ற வகையில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

    இது தொடர்பான இ-மெயில் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மெயிலை பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த மெயிலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த அதிர்ஷ்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என கருதிய அவர் தனது மருமகனிடம் மெயிலை காட்டி பரிசு விழுந்ததை உறுதி செய்தார். மேலும் நேஷனல் லாட்டரியில் இருந்தும் அதிகாரபூர்வமாக அவருக்கு பரிசு விழுந்ததை உறுதிபடுத்திய டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்து டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறுகையில், இந்த பரிசை பற்றி நினைக்கும் போதெல்லாம் விசித்திரமாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். இது எனக்கு 100 வயது வரை இருப்பதற்கான காரணத்தை அளிக்கிறது. இந்த பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • போலீசார் அதிரடி வேட்டை
    • கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

    இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பலசரக்கு கடை நடத்தி வந்த ஜோசப் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதா? என பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 874 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • காரைக்கால் திருநள்ளாறில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை முன்பு, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில், திருந ள்ளாறு போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது, அங்கு திருநள்ளார் நகர் பகுதியை ச்சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரது செல்போனில் பொது மக்களுக்கு 3 எண் கொண்ட தடை செய்ய ப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாரிமுத்தை போலீசார் கைது செய்து, அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.

    ×