search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hraja"

    திருமாவளவனை பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்ட எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    கரூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்டதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா அருகே கூடினர். பின்னர் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியபடியே அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி எரித்தனர். அப்போது அவதூறு கருத்து வெளியிட்டதற்கு எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், எச்.ராஜா மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அக்னி அகரமுத்து, செய்தி தொடர்பாளர் இளங்கோ, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.

    இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோ‌ஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர்‌ பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார். #hraja #parliamentaryelections

    பழனி:

    பழனியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறும் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அந்த மாநிலத்தில் இரு கிறிஸ்தவ சபைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை குறித்து வந்த தீர்ப்பை நிறைவேற்ற வில்லை. கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராமகிருஷ்ணன் கொலையில் முதல் குற்றவாளி பினராய் விஜயன்தான்.


    பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மற்ற கோவில்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. அவரது பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் இல்லை எனில் விரைவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #parliamentaryelections

    எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த கவர்னர் பன்வாரிலாலை திரும்ப பெறவேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஐகோர்ட்டு வக்கீல் மனு அளித்துள்ளார். #hraja #governorbanwarilalpurohit #president

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக இருப்பவர் எஸ்.துரைசாமி. இவர், ஜனாதிபதிக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, ஐகோர்ட்டு குறித்து இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக போலீசார் எல்லாம் ஊழல்வாதிகள் என்றார். தடையை மீறி விநாயகர் ஊர்வலத்தை செல்ல அனுமதிக்கவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசாரை மிரட்டினார்.

    இதையடுத்து திருமயம் போலீசார், எச்.ராஜா மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து எச்.ராஜா, தலைமறைவானார். அதாவது போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில், செப்டம்பர் 25-ந்தேதி தலைமறைவு குற்றவாளியான எச்.ராஜாவை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜ்பவனுக்கு அழைத்து, வழக்கு தன்னுடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.

    ஒரு மணிநேரத்துக்கு மேலாக போலீசார் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கு உள்பட பல வி‌ஷயங்களை அவர்கள் விவாதித்துள்ளனர். இதன் மூலம் போலீசாரால் தேடப்பட்டு வந்த எச்.ராஜாவை பாதுகாத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 212ன் கீழ் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் இழைத்துள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 155ன் கீழ் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுள்ளார். இவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 156(1) கீழ், ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியும்.

    கவர்னர் என்பவர் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஒருவேளை சட்டத்தை மீறி அவர் செயல்படும்போது, ஜனாதிபதியின் அந்த விருப்பத்தை அவர் இழந்து விடுகிறார். எனவே, ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்தை திரும்ப பெறவேண்டும். கவர்னர் பதவியில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை நீக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு ஆகும்.


    தமிழக கவர்னரை பொருத்தவரை, அவர் தலைமறைவு குற்றவாளி எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர் குறித்த விவரங்களை போலீசுக்கு தெரிவிக்கவில்லை. குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 37ன்படி, குற்றவாளியை போலீசாரிடம் பிடித்து கொடுக்கவேண்டும். இதற்காக போலீசாருக்கு ஒவ்வொரு நபரும் உதவியாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

    அதன்படி ஒவ்வொரு நபர் என்பதில், கவர்னரும் உள்ளடங்கிவர் தான். ஆனால், கவர்னர் தன் கடமையை செய்ய தவறியதுடன், தன் வீட்டில் எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். எச்.ராஜா குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் மறைத்துள்ளார்.

    எனவே, அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஏற்கனவே, சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தேன். கவர்னர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தேன்.

    ஆனால், போலீஸ் கமி‌ஷனர் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றார். இதனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது குற்றவியல் கோர்ட்டில் குற்றவழக்கு தொடர உள்ளேன். இந்த சூழ்நிலையில், தமிழக கவர்னரை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றங்களை செய்துள்ளதால், அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #hraja #governorbanwarilalpurohit #president

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection #admk

    பீளமேடு:

    அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டு அழைப்பு கொடுத்தும் நீங்கள் ஏன் புறக்கணித்திருக்கிறீர்கள்?

    பதில் : புரோடாகால் படி எம்.எல்.ஏ.க்கள் பெயரை போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். உண்மையிலேயே நாங்கள் வர வேண்டும் என்று நினைத்தால் எங்களுடைய அவைல பிலிட்டியை தெரிந்து கொண்டு தான் யாரும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வைப்பார்கள்.

    புரோடாகால்படி சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை போட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று அருந்ததியர் சமுதாயம் சார்பாக நடக்கிற மாநாட்டில் நான் பங்கேற்க இருப்பது 2, 3 மாதங்களுக்கு முன்பு திட்ட மிடப்பட்டது. எங்கள் கட்சி நிகழ்ச்சி என்றால் கூட தள்ளி வைத்துக் கொள்ளலாம்.

    அ.தி.மு.க.வில் உயிரோட்டமான தொண்டர்கள் இப்போது இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து 2 நாளைக்கு 1000 ரூபாய் கொடுத்து சுற்றுலா செல்லலாம் என கூறி இலவச வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்கின்றனர். தொண்டர்கள் அவர்களிடம் இருப்பதாக காட்டுவதற்காகவே இது போன்று மக்களை தேடி, தேடி அழைக்கிறார்கள்.

    கேள்வி : உங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டதா?

    பதில்: அரசு நிகழ்ச்சிகளில் வழக்கப்படி அழைப்பிதழில் அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களை சேர்ப்பது வழக்கம். ஆனால் நான் ஏற்கனவே திட்டமிட்டடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வில்லை.

    கேள்வி : நூற்றாண்டு விழாவுக்காக விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    பதில் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை இவர்கள் கேட்பார்களா? அதேநேரம் அ.ம.மு.க.வின் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையை வைத்து அகற்றுவது என்பது கேவலமான செயல். உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா இவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை?

    கேள்வி : எச்.ராஜா விவகாரம் குறித்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் : அமைச்சர் பதவியில் இருப்பதால் ஆர்.பி. உதயகுமார் மேதாவிகள் போல பேசுகிறார்? பொறுப்பு இல்லை எனில் யாரும் இவரை சீண்ட மாட்டார்கள்.

    கேள்வி : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என தம்பிதுரை கூறி உள்ளாரே?


    பதில் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரனுக்கு கோவை மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், உடுமலை சண்முகவேல், புறநகர் மாவட்ட செயலாளர் சுகுமார், தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அகஸ்டஸ், பொற்காலம் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.என்.ஆர். ராமலிங்கம், வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயசுதா, மாணவரணி மாவட்ட செயலாளர் சஞ்சீவிநாதன், பகுதி செயலாளர்கள் தங்கவேலு, நாகராஜ், ஜெயராஜ், மற்றும் கோபிநாத், மா.பா. ரோகிணி, அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #admk

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது என்று கவர்னர் மற்றும் மத்திய அரசு மீது முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #mutharasan

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மன்னித்து விட்ட நிலையில், மத்திய அரசு உள்நோக்கத்துடன் கவர்னர் மூலமாக தடுத்து வருவதாக கருதுகிறோம். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை மறுத்துள்ள 7 தமிழர்களை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

    தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல் படவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக, எடுபிடி அரசாக உள்ளது. வருமான வரி சோதனை என்ற அடிப்படையில் பா.ஜ.க. அரசு, இவர்களை தொடர்ந்து தங்களது அடிமைகளாக வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறோம்.


    நீதிமன்றத்தையும் காவல் துறையையும் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு மறுத்து வருவதில் இருந்தே மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது என்றார். #mutharasan #tngovernor #centralgovernment #rajivgandhicase #hraja

    தனிப்படைகள் அமைக்கப்பட்டபோதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #hraja #bjp

    கோபி:

    கோபியில் த.மு.மு.க. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் நாடாளுமன்ற மாண்புகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை.

    அதேபோல் மனைவி புகார் அளித்தால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதினால் குடும்பங்கள் சீர் குலைந்து விடும். இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள்.

    சிவில் சட்டத்தில் இருந்த திருமண பந்தத்தை கிரிமினல் சட்டத்தில் கொண்டு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது. உடனடியாக எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.

    அதற்கு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடையும். அதற்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக அமையும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாததால் தமிழகத்தில் நடைபெறுவது பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சி என்பதை காட்டுகிறது.

    இலங்கை போர் குற்றம் என தி.மு.க. மீது அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் தி.மு.க. வை குற்றம் சொல்ல அ.தி.மு.க. விற்கு எந்த அருகதையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #bjp

    எச்.ராஜா- கருணாஸ் பொது இடங்களில் பேசும்போது வரம்பை கடைபிடிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #hraja #karunas
    திருச்சி:

    திருச்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், ரவீந்திரன் குணா, மற்றும் மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால் த.மா.நிர்வாகிகள் அய்யப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தேர்தல் நேரத்தின் போது பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் பட்டு வாடாவை தடுக்க முடியாது என்றால் தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்கி பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கலாம். 

    தமிழக அமைச்சர்கள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை அமைச்சர்கள் சந்தித்து அதில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர்கள் தவறு செய்தது போல் ஆகிவிடும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜி.கே.வாசன் கருத்து தெரிவிப்பவர்கள், பேசுபவர்கள் யாராக இருந்தாலும் பொது இடங்களில் பேசும் போது வரம்பை மீறி பேசக்கூடாது.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். #gkvasan #hraja #karunas
    இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பற்றியும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக எச். ராஜாவை கண்டித்து கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உடன்குடி:

    இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பற்றியும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் வீட்டு பெண்களை பற்றியும், பெண் ஊழியர்கள் பற்றியும் அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #hraja #drkrishnasamy

    சேலம்:

    புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சேலத்திற்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எஸ்.சி. பட்டியலில் உள்ள பள்ளர், காலாடி, தேவேந்திரகுல வோளாளர் உள்பட 6 இனத்தவரையும் அதில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் வருகிற 6-ந் தேதி திருச்சியில் கட்சியின் இளைஞரணி சார்பில் மாநாடு நடக்கிறது.

    எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளனர். பட்டியல் பிரிவில் வைத்துள்ளது அடிமை தனத்திற்கு சமம். எனவே அதில் இருந்து நீக்க வேண்டும். வருகிற தேர்தலில் புதிய தமிழகம் புதிய தளம் அமைத்து அரசியல் களம் காணும்.


    வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல எச்.ராஜா வழக்கிலும் அரசு எந்த முடிவையும் எடுக்கலாம் என்றார். #hraja #drkrishnasamy

    ஐகோர்ட்டையும், போலீசாரையும் எச்.ராஜா விமர்சனம் செய்து பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்ட 5 பேரின் மனுவை 27-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #hraja #maduraihighcourt

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த ஊரில் உள்ள மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையை கரைப்பதற்காக கடந்த 15-ந் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார்.

    அப்போது அந்த சிலையை ஊருக்குள் எடுத்துச்செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டையும், போலீசாரையும் எச்.ராஜா விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எச்.ராஜா உள்ளிட்ட பலர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெய்யபுரத்தை சேர்ந்த வைத்தியலிங்கம், சொக்கலிங்கம், பெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனார்புரத்தை சேர்ந்த ரத்தினம் ஆகிய 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், கடந்த 15-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக திருமயம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


    அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத பலர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் எங்களையும், எங்களது கிராமத்தினரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். மெய்யபுரம் கிராம மக்கள் சட்டத்தை மதித்து நடப்போம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் முன்ஜாமீன் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு 27-ந்தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். #hraja #maduraihighcourt

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #ministerrajendrabalaji #hraja

    கோவை:

    கோவையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே இல்லை.

    தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமை, கருத்துரிமை இருப்பதால் தான் எச். ராஜா இவ்வாறு பேசி வருகிறார். எச். ராஜா பேச்சை அவரது கோபத்தின் வெளிப்பாடாக தான் நான் பார்க்கிறேன்.

    அவருக்கு பிர‌ஷர் ஏறி இருக்கும். அதனை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எச். ராஜா பேச்சையும் மாணவி சோபியா பேச்சையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல.


    தமிழிசை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். இதே சம்பவம் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வரலாம். அதனால் தான் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒருவர் சென்றால் அங்கிருந்து 10 பேர் இங்கு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இரட்டை இலை பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. எச். ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #hraja

    ×