search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "effigy"

    • போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது.அப்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

    இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.

    இதில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்த போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருமாவளவனை பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்ட எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    கரூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்டதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா அருகே கூடினர். பின்னர் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியபடியே அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி எரித்தனர். அப்போது அவதூறு கருத்து வெளியிட்டதற்கு எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், எச்.ராஜா மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அக்னி அகரமுத்து, செய்தி தொடர்பாளர் இளங்கோ, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் தசரா விழாவை முன்னிட்டு மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடினர். #Dussehra #Maharashtra
    மும்பை:

    தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். #Dussehra #Maharashtra
    ×