search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது- ராஜேந்திர பாலாஜி பேட்டி
    X

    பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது- ராஜேந்திர பாலாஜி பேட்டி

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #ministerrajendrabalaji #hraja

    கோவை:

    கோவையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே இல்லை.

    தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமை, கருத்துரிமை இருப்பதால் தான் எச். ராஜா இவ்வாறு பேசி வருகிறார். எச். ராஜா பேச்சை அவரது கோபத்தின் வெளிப்பாடாக தான் நான் பார்க்கிறேன்.

    அவருக்கு பிர‌ஷர் ஏறி இருக்கும். அதனை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எச். ராஜா பேச்சையும் மாணவி சோபியா பேச்சையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல.


    தமிழிசை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். இதே சம்பவம் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வரலாம். அதனால் தான் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒருவர் சென்றால் அங்கிருந்து 10 பேர் இங்கு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இரட்டை இலை பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. எச். ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #hraja

    Next Story
    ×