என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது- ராஜேந்திர பாலாஜி பேட்டி
கோவை:
கோவையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே இல்லை.
தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமை, கருத்துரிமை இருப்பதால் தான் எச். ராஜா இவ்வாறு பேசி வருகிறார். எச். ராஜா பேச்சை அவரது கோபத்தின் வெளிப்பாடாக தான் நான் பார்க்கிறேன்.
அவருக்கு பிரஷர் ஏறி இருக்கும். அதனை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எச். ராஜா பேச்சையும் மாணவி சோபியா பேச்சையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல.
தமிழிசை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். இதே சம்பவம் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வரலாம். அதனால் தான் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒருவர் சென்றால் அங்கிருந்து 10 பேர் இங்கு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இரட்டை இலை பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. எச். ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #hraja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்