search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணசாமி"

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
    • கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களை பேச்சு வார்த்தை குழு நேரில் சந்தித்து வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் குழுவினர் அ.தி.மு.க. இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர்.


    அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பா.பென்ஜமின், டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்தனர். சிறிது நேரம் அவருடன் ஆலோசனை நடந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.

    பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது" என்றார். பேச்சுவார்த்தை குறித்து எஸ்.பி.வேலுமணி கூறும் போது, "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

    • கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது.
    • நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு செய்யாமல் இருந்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி திருச்சி வருகை தந்தார். அவரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்க செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.

    இதனால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கியது.

    ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நான் நட்பு ரீதியாகவே பழகி வருகிறேன்.

    கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் எடப்பாடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்கூட்டணி பலமாக உள்ளது. நமது கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் தமிழகம் வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது கூட்டணியும் பலப்படும் என தெரிவித்தார். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.

    மேலும் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி நீடித்தது. அவர் நடைபயணம் ஆரம்பித்த பின்னர் தான் கூட்டணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அ.தி.மு.கவினர் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    பொதுவாக மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு மாநிலத்தில் இருக்க கூடிய கட்சி தான் தலைமை தாங்கும்.

    நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம். கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரியப்படுத்துவோம்.

    தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எளிதாக தி.மு.கவை வென்று விட முடியும்.

    தி.மு.க தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதிபாதியாகவே நிற்கிறது. மேலும் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி ஏற்ற 4 மாதங்களிலேயே இது தெரிந்து விட்டது.

    இதனை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் முதலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு.
    • தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி , மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.

    சென்னை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு. கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்.

    எனக்கு கிடைத்த தகவல்படி பா.ஜ.க. மேலிடம் 5 மாநில தேர்தலுக்கு பிறகு கூட மீண்டும் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்கலாம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலையற்ற தன்மை நிகழ்கிறது.

    தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி, மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
    • பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
    • புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.

    சென்னை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.

    இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.

    மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

    இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

    • ஜாதி மோதல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது தான் காவல்துறையின் பணி.
    • போலீசார் திட்டமிட்டே எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்தது எங்கள் கட்சி தான். எங்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி காலையில் ஆற்றில் அஞ்சலி செலுத்திவிட்டு மாலையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். அதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது, அனுமதி கேட்ட இடம் ஜாதி ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதி எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என கூறிவிட்டனர்.

    ஜாதி மோதல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது தான் காவல்துறையின் பணி. ஆனால் போலீசார் திட்டமிட்டே எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    இதற்கு போலீசார் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியில் சந்திப்போம்.

    திராவிடம், திராவிடம் என்று பேசியே மக்களை ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக பிரித்து விட்டார்கள். 50 வருடமாக மாறி, மாறி ஆட்சி செய்த கட்சிகள் மத மோதல்களை தடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு.

    தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×