என் மலர்
நீங்கள் தேடியது "puthiya tamizhagam katchi"
- டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது.
- வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலையில் திருச்சியிலும், மாலையில் கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2001-ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.
இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 17-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026-ல் புறக்கணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை தி.மு.க. அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை. தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா ? திராவிட மாடலா?
ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி வளர்ச்சிக்கு முக்கியமல்ல, மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் தி.மு.க. அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா ?
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய தமிழக கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வழக்கு தொடர அனுமதி கேட்டோம். அப்பொழுது இந்த விஷயத்தை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர்கள் ஆறுமுகம், சின்னஅப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இம்மானுவேல் சேகரன் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கக் கோரியும், குரு பூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அர்ச்சுணன், பழனிவேல், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இமானுவேல் சேகரன், சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7, 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் போல் இவர்கள் குறித்த விவரங்களையும் அனைத்து வகுப்புகளுக்கும் துணை பாடதிட்டமாக சேர்க்க வேண்டும்.
அதே போல் அனைத்து தலைவர்களின் பெயரிலும் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
கல்வி, மின்சாரம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி:-பழனி சிலை மோசடி வழக்கில் அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியது பற்றி?
பதில்:- அரசு கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. எனவே அரசின் உத்தரவுக்கு யாராக இருந்தாலும் கீழ்படிந்தே ஆக வேண்டும்.
கேள்வி:-கவர்னர் அடுத்து எங்கு ஆய்வு செய்தாலும் போராட்டம் நடத்துவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்:-சில கேள்விகளுக்கு உடனே பதில் அளித்துவிட முடியாது. அடுத்து நாம் சந்திக்கும் போது இதற்கான பதிலை நிச்சயம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.#Krishnasamy






