search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthiya thamizhagam katchi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
    • புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.

    சென்னை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.

    இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.

    மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

    இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல என்று கிருஷ்ணசாமி கூறினார். #Krishnasamy #OPS
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் இளைஞரணி பொறுப்பாளர் ராஜசேகர் விபத்தில் காயமடைந்து கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது வருந்தத்தக்க வி‌ஷயம். அதுவும் அனுமதி அளித்து விட்டு பார்க்க மறுத்திருந்தால் ஏற்கத்தல்ல. தமிழக மக்களின் பிரநிதிகளை மத்திய அரசின் அமைச்சர்கள் அப்படி செய்திருக்கக்கூடாது. செய்திருந்தால் ஏற்புடையதல்ல.


    தமிழகத்தில் கல்வித் தரம் மிகவும் தாழ்ந்து போய்விட்டது. வரக்கூடிய தலைமுறையை உருவாக்கக் கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. எனவே தரம் மட்டுமல்ல. தியாக உணர்வோடு இருக்க கூடியவர்களும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களும் தான் ஆசிரியர் பணிக்கு தேவை. தமிழக அரசின் சொத்து வரி உயர்வு தவறு. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனை திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Krishnasamy #OPS
    ×