search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt hospital"

    • நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது

    நெல்லை:

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளுக்கு உதவியாக வரும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு ஓய்வெடுப்பார்கள்.

    திருட்டு

    அவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குமரி மாவட்டம் எடலாக்குடியை சேர்ந்த முகமது சம்சீர்(வயது 19), மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த மற்றொருவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை(47) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர்.

    • எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
    • மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினை மேற் கொண்டனர்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகன் பணியினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள் பலவேசம் மூக்கன், செவிலியர்கள் கண்காணிப்பாளர் மலர்விழி, செவிலியர்கள் ராணி, அப்பாஸ் மீரான் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

    • சரஸ்வதிக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்தது.
    • மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (வயது43).

    இவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்து சிகிச்சைகாக பல மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். இதயத்தில் இதய வால்வு பிரச்சினை இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிகிச்சைக்காக சரஸ்வதியை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காளிமுத்து கடந்த 4-ந் தேதி அதிக வலியும், வீக்கம் இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர்கள் சரஸ்வதியின் இடது கையை பரிசோதித்து, நுண்கதிர் படம் எடுத்துப் பார்த்து அவருக்கு இன்னும் அந்த எலும்பு சேரவில்லை என்றும் அது மாறுபட்ட கோணத்தில் இருப்பதை அறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அறிவுரை யின்படி உடனடியாக இருதய சிகிச்சை நிபுனர் மற்றும் மயக்க மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இருதய பரிசோதனை செய்யும் போது இருதயத்தில் மூன்று வால்வுகளில் சுருக்கம் இருந்தது தெரிய வந்தது.

    இடது கையில் உடைந்த 2 எலும்புகளுக்கும் இதயவியல் நிபுணரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை கலெக்டர் ஆகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா ஆகியோர் பாராட்டினர்.


    • பிரேத பரிசோதனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளது.
    • இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு தான் கொண்டு வருவது வழக்கம். பிரேத பரிசோ தனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூ ட்டப்பட்ட பிணவறை உள்ளது.

    இன்று காலை இந்த பிணவறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு பிணவறையின் பூட்டை உடைத்தது யார் என்றும் இதற்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
    • ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சியை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய தரச்சான்று

    இதற்காக மருத்துவ மனையின் தரத்தினை உயர்த்துவதற்காக நோயாளிகளின் நலனுக்காக உயர் சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கும், தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு வந்தது.

    மேலும் பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் மருத்துவமனையின் பல்வேறு கட்டிடங்களை புதுப்பித்து வர்ணம் பூசி புதுமையாக்கினர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் வழிகாட்டுதலுடன் தரச்சான்று பெறுவதற்கு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்துதுறை பணியாளர்களும் முழு ஒத்துழைப்பும் கொடுத்து தேசிய தரச்சான்று பெற்று முதன்மையான மருத்துவ மனையாக மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டனர் .

    இந்த ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்பட்டது . இதில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனைத்து தரத்தினையும் பெற்ற சிறந்த மருத்துவ மனைக்கான சான்றினை பெற்ற முதன்மை மருத்துவமனையாக தேசிய தர குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

    இதில் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பிரசவ அறை , பிரசவ வார்டு உள்ளிட்ட 18 பிரிவுகளின் தரமும் சிறந்ததாக உள்ளதாக தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது .

    மேலும் இத்தரத்தினை மேற்படுத்த உதவிய மருத்துவமனை அனைத்து துறை பணியாளர்கள், பொதுமக்களுக்கும் மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் நன்றியினை தெரிவித்தார் .

    மேலும் பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகமும், பணியா ளர்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மருத்துவமனையின் இத்தரத்தினை எப்போதுமே நிரந்தரமாக பேணிக்காத்து சிறப்பான சேவையினை வழங்கு வதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவமனையின் கண்கா ணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முடிவுற்ற கட்டிடங்கள்

    அந்த வகையில் இன்று காலை தூத்துக்குடி வந்த அவர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் முடிவுற்ற மருத்தவமனை கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து கார் மூலம் நெல்லை வந்தார்.

    வி.எம். சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.2.74 கோடி

    பின்னர் நெல்லை அரசு மருத்தவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.74 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    அந்த வகையில் ரூ.72 ½ லட்சத்தில் நுண்கதிர் துறையில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், ரூ.26.9 லட்சத்தில் 10 படுக்கைகள் கொண்ட தீவிர அறுவைசிகிச்சைப்பிரிவு, ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    புதிய மருத்துவமனை

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகள் தங்கும் விடுதியில் அதிநவீன உணவு விடுதியை திறந்து வைத்து 'தாய் கேர்' குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மேலும் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகள் துறை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், கலெக்டர் விஷ்ணு, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, டீன் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.
    • தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.

    கட்டிடங்களை திறந்து வைக்கிறார்

    விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும் அவர் கயத்தாறு அருகே உள்ள கடம்போடு வாழ்வு, காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

    ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் எக்ஸ்ரே அறை ஆகிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    சான்றிதழ்

    தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

    • அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார்.
    • பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23).

    இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னே ஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்காக ஏற்பாடுகளை ஆஸ்பத்திரியில் மேற் கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.இதையடுத்து விக்னேஸ்வ ரன் தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனு மதித்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் அங்கிருந்து குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி களிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ேமலும் அறுவை சிகிச்சையி ன் போது மின் ெவட்டு ஏற்பட்டு இருந்தால் அந்த கர்ப்பிணியின் நிலை என்னவாயிருக்கும் என பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    எனவே அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ தேவைகளை உடனே அரசு செய்யவேண்டும். மின் வெட்டு ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரியை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது
    • அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் தலைமை தாங்கினர். இணை இயக்குனர் கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி உயர்சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள வார்டில் மாரடைப்பு , அனைத்து விஷமுறிவு, பாம்புகடி மற்றும் மூளை காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க கூடிய வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் தானியங்கி முறையில் இயங்க கூடியது. மேலும் நோயாளிகளே தாங்களாகவும் இயக்கும் முறையில் எளிதாக உள்ளது.

    நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் விஜயகுமார், செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, முத்துலட்சுமி, ராஜாத்தி ஜெகதா, வசந்தி, செவிலியர் சுதா மற்றும் அனைத்துதுறை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா.
    • தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், நகர பொதுசெயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் , திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் , திருப்பூர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய கண்ணன், நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் சிக்கிய புதுமண தம்பதிக்கு செல்போன் வெளிச்சத்தில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டது.

    விழுப்புரம்: 

    விபத்தில் சிக்கிய புதுமண தம்பதிக்கு செல்போன் வெளிச்சத்தில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த தம்பதிக்கு சென்னை அம்பத்தூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த கார் திண்டிவனம் அருகே உள்ள நத்தமேடு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

    இதில் புதுமண தம்பதி மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வெளிச்சத்தை ஏற்படுத்தி சிகிச்சைக்கு உதவினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவுக்காவது 24 மணி நேர மின்சார சேவை அளிக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
    • மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பல நாட்கள் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

    இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    அதுமட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் பலர் ரத்த அழுத்த நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் சிகிச்சை எடுக்க வந்தவர்கள். இதனால் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 9.15 மணிக்கு மருத்துவர் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதே போல் இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்காததால் இரவு நேரங்களில் வரக்கூடிய அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ராதாபுரம் ஒன்றிய பா.ஜ.க. ஊடக தலைவர் காமராஜ் கூறியதாவது: -

    ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தான் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் மருத்துவர்கள் இருப்பதே கிடையாது. மருத்துவர்கள் உரிய நேரத்திற்கும், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கும் வருவதும் கிடையாது.

    இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    ×