search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hall"

    • இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
    • விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்து றை அமைச்சர் சாமிநாதன், தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

    தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் செய்தித்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருந்துள்ளனர்.

    தற்போது முதல்-அமைச்சர் கவனத்தி ற்கு கொண்டு சென்று ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று சரியான முறையில் பராமரிக்கும் அரசு நிர்வாகத்துறையிடம் ஒப்படைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அ ர்ச்சனா அவர்கள், பொதுப்ப ணித்து றை செயற்பொறி யாளர் திரு.பால ரவிக்குமார் அவர்கள், உதவி செயற்பொறி யாளர்கள் திருமதி. அல்மாஸ் பேகம் அவர்கள், திரு.ராமர் அவர்கள், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் திரு.என்.செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
    • காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.

    இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.

    பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.

    • திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.

    அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.

    அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது
    • அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் தலைமை தாங்கினர். இணை இயக்குனர் கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி உயர்சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள வார்டில் மாரடைப்பு , அனைத்து விஷமுறிவு, பாம்புகடி மற்றும் மூளை காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க கூடிய வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் தானியங்கி முறையில் இயங்க கூடியது. மேலும் நோயாளிகளே தாங்களாகவும் இயக்கும் முறையில் எளிதாக உள்ளது.

    நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் விஜயகுமார், செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, முத்துலட்சுமி, ராஜாத்தி ஜெகதா, வசந்தி, செவிலியர் சுதா மற்றும் அனைத்துதுறை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 59.45 லட்சத்துக்கு விற்பனைஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.93 1/2குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 554தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.50-க்கும், குறைந்த விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.23.70-க்கும் என ரூ.1 லட்சத்து 36ஆயிரத்து 86-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 560.96 1/2குவிண்டால் எடை கொண்ட 1164 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ80.70-க்கும், குறைந்த விலையாக ரூ75.99-க்கும் சராசரி விலையாக ரூ79.79-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.76.69-க்கும், குறைந்த விலையாக ரூ.60.29-க்கும், சராசரி விலையாக ரூ.73.39-க்கும் என ரூ.42லட்சத்து 8ஆயிரத்து 556-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 240.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் ரூ. 1 கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .80-க்கும், குறைந்த விலையாக ரூ.63 .29-க்கும் சராசரி விலையாக 68 .20 -க்கும்என ரூ.16 லட்சத்து 646-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.59 லட்சத்து45ஆயிரத்து288-க்கு விற்பனை ஆனது.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

     பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 18.36 1/2குவிண்டால் எடை கொண்ட 4ஆயிரத்து 973தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.65-க்கும், குறைந்த விலையாக ரூ.21.89-க்கும், சராசரி விலையாக ரூ.23.69-க்கும் என ரூ. 42ஆயிரத்து 869-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 321.72 1/2குவிண்டால் எடை கொண்ட 660மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ85.06-க்கும், குறைந்த விலையாக ரூ81.16-க்கும் சராசரி விலையாக ரூ84.39-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.06-க்கும், குறைந்த விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.79.99-க்கும் என ரூ.26லட்சத்து 10ஆயிரத்து 816-க்கு விற்பனை ஆனது.

    113.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 346 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .20-க்கும், குறைந்த விலையாக ரூ.64.16-க்கும் சராசரி விலையாக ரூ.67 .30 -க்கும்என ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 492-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

    • அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை நாளை தொடங்குகிறது
    • ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது. இதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை (திங்கட் கிழமை) முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.

    இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கொள் முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்திகளை பறித்து நிழலில் உலர வைத்து தூசி மற்றும் சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.

    இதன் மூலம் விவசாயி களின் விளை பொரு ட்களுக்கு சரியான எடை, போட்டி விலை உடனடி பணம் எந்த விதமான பிடித்தம் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குனர், செயலாளர் மற்றும் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகி யோர் தெரிவித்தனர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×