search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulatory"

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 59.45 லட்சத்துக்கு விற்பனைஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.93 1/2குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 554தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.50-க்கும், குறைந்த விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.23.70-க்கும் என ரூ.1 லட்சத்து 36ஆயிரத்து 86-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 560.96 1/2குவிண்டால் எடை கொண்ட 1164 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ80.70-க்கும், குறைந்த விலையாக ரூ75.99-க்கும் சராசரி விலையாக ரூ79.79-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.76.69-க்கும், குறைந்த விலையாக ரூ.60.29-க்கும், சராசரி விலையாக ரூ.73.39-க்கும் என ரூ.42லட்சத்து 8ஆயிரத்து 556-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 240.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் ரூ. 1 கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .80-க்கும், குறைந்த விலையாக ரூ.63 .29-க்கும் சராசரி விலையாக 68 .20 -க்கும்என ரூ.16 லட்சத்து 646-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.59 லட்சத்து45ஆயிரத்து288-க்கு விற்பனை ஆனது.

    ×