search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "system"

    • அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வந்தனர்
    • வாகன தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியான என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி வணிகவளாகம், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. எப்பொழுதும் வாகன போக்குவரத்து நிறைந்திருக்கும். இதில் கடைவீதி வழியாக சரக்கு வாகனங்களும் வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில்,என்.ஜி.ஆர்.ரோட்டில் அண்ணா சிலை அருகே, வாகன தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.
    • பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    https://gdp.tn.gov.in/dhl, என்ற இணையதளத்தின் வாயிலாகவோ wgrcchennai;gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு குறை தீர்க்கும் அலுவலரை நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

    மேலும், தொலைபேசி எண்:044 - 25340518 (நேரம் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொளத்தூர் வட்டார விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன முறை தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மேட்டூர் அடுத்த நவபட்டி கிராமத்தில் அட்மா வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் பாசன முறை பரப்புதல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    நவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார்.

    ஓய்வு பெற்ற துணை இயக்குனர் நாகலிங்கம், நுண்ணுயிர் பாசன முறைகள் ஏன் அமைக்க வேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார் நுண்ணுயிர் பாசன நிறுவனத்தின் செயல்பாடுகள் பாசன குழாய் எவ்வளவு இடை–வெளியில் அமைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

    நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.

    • அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை நாளை தொடங்குகிறது
    • ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது. இதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை (திங்கட் கிழமை) முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.

    இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கொள் முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்திகளை பறித்து நிழலில் உலர வைத்து தூசி மற்றும் சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.

    இதன் மூலம் விவசாயி களின் விளை பொரு ட்களுக்கு சரியான எடை, போட்டி விலை உடனடி பணம் எந்த விதமான பிடித்தம் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குனர், செயலாளர் மற்றும் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகி யோர் தெரிவித்தனர்.

    ×