search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன முறை   தொழில்நுட்ப பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன முறை தொழில்நுட்ப பயிற்சி

    • கொளத்தூர் வட்டார விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன முறை தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மேட்டூர் அடுத்த நவபட்டி கிராமத்தில் அட்மா வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் பாசன முறை பரப்புதல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    நவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார்.

    ஓய்வு பெற்ற துணை இயக்குனர் நாகலிங்கம், நுண்ணுயிர் பாசன முறைகள் ஏன் அமைக்க வேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார் நுண்ணுயிர் பாசன நிறுவனத்தின் செயல்பாடுகள் பாசன குழாய் எவ்வளவு இடை–வெளியில் அமைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

    நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×