search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ma.subramanian"

    • பெட் சிட்டி ஸ்கேன் தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது.
    • நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 கட்டிடங்கள் நாளை திறந்து வைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.1.53 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழழ வள்ளியூரில் இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசினார். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை கண்டறியும் அதிநவீன ஸ்கேன் கருவியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளேன். பெட் சிட்டி ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்த ஸ்கேன் முறையானது தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது. இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து இந்த மாவட்டங்களின் பொதுமக்கள் நலன் கருதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 12 கோடியில் இந்த புதிய பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தொடங்கி வைக்க உள்ளேன்.

    மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 708 நகர்புற சுகாதார மையங்களை காணொலி காட்சி வாயிலாக புதிய முறையில் தொடங்கி வைக்க உள்ளார். அதில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 22 கட்டிடங்களில் 10 கட்டிடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால் அவை நாளை திறந்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முடிவுற்ற கட்டிடங்கள்

    அந்த வகையில் இன்று காலை தூத்துக்குடி வந்த அவர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் முடிவுற்ற மருத்தவமனை கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து கார் மூலம் நெல்லை வந்தார்.

    வி.எம். சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.2.74 கோடி

    பின்னர் நெல்லை அரசு மருத்தவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.74 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    அந்த வகையில் ரூ.72 ½ லட்சத்தில் நுண்கதிர் துறையில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், ரூ.26.9 லட்சத்தில் 10 படுக்கைகள் கொண்ட தீவிர அறுவைசிகிச்சைப்பிரிவு, ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.

    புதிய மருத்துவமனை

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகள் தங்கும் விடுதியில் அதிநவீன உணவு விடுதியை திறந்து வைத்து 'தாய் கேர்' குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மேலும் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகள் துறை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், கலெக்டர் விஷ்ணு, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, டீன் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.
    • தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார்.

    கட்டிடங்களை திறந்து வைக்கிறார்

    விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும் அவர் கயத்தாறு அருகே உள்ள கடம்போடு வாழ்வு, காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

    ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் எக்ஸ்ரே அறை ஆகிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    சான்றிதழ்

    தொடர்ந்து மருத்துவ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

    ×