என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
- நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
- செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளுக்கு உதவியாக வரும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு ஓய்வெடுப்பார்கள்.
திருட்டு
அவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குமரி மாவட்டம் எடலாக்குடியை சேர்ந்த முகமது சம்சீர்(வயது 19), மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த மற்றொருவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை(47) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்