search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவலம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    • வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

    ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.

    இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-

    வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.

    சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

    • அன்னவாசல் பகுதியில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
    • கூண்டு வைத்து பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் பகுதிகளில் உள்ள புதுத்தெரு 1, 2, 3-ம்வீதி, கோல்டன் நகர், இஸ்மாயில் நகர், குறிஞ்சி நகர், உப்புகாரத்தெரு, பள்ளிவாசல் தெரு, பழைய கடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக உணவு பொருட்களுடன் செல்லும் சிறுவர்களை குரங்குகள் விரட்டி சென்று உணவு பொருட்களை பிடுங்கி விடுகின்றன. மேலும், வீட்டின் உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்கிறது. காய்கறிகள், துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், மண்ட பம், திருவாடானை, கமுதி, ராமேசுவரம் உள்பட பல்வேறு தாலுகாவில் உள்ள 25-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளி கள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகி றார்கள். ஆனால் பள்ளி களில் 100-க்கும் அதிகமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.

    இங்குள்ள மாணவர்கள் வகுப்பறை வசதி இல்லா ததால் வெயில், மழையில் மரத்தடியிலும், பள்ளிகளின் வராண்டாக்களிலும் அமர்ந்து பாடம் படிக்கும் பரிதாப நிலை உள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், வகுப்பறைகள் இல்லாத மேல்நிலைபள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரவு கிடைத்ததும் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்டும் பணி தொடங்கப்படும் என்றார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது
    • ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தவ ர்களுக்கான சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும் பொழுது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து சென்று எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவ ட்ட நிர்வாகம் இது வரை பாலம் கட்டித் தரவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு முறையும் உடலை 15 அடி ஆழமான ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்ேபாது அப்பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குப்பையை ஏற்றி சென்று கொட்டி விட்டு உணவு பொருட்களை எடுத்து வந்த அவலம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    திருச்சி, 

    தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உணவருந்தி பசியாறி வருகிறார்கள். இந்த அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்டவை அங்குள்ள மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில் நேற்று நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அதனை குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு மீண்டும் வரும் வழியில் அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அதே குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்து வந்தனர். அம்மா உணவகத்தில் அதே துப்புரவு பணியாளர்கள் இறக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அம்மா உணவகத்திற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் சற்றும் சுகாதாரமற்ற முறையில் எடுத்து வரப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.

    இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

    • திருப்பத்தூர் பயணிகளுக்கு அவலம் தொடருகிறது.
    • இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முகமது தாரிக். இவர் தாயாருடன் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருவதற்காக மாட்டு த்தாவணி பஸ் நிலையத்தில் மன்னார்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். நடத்துனரிடம் திருப்பத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு நடத்துனர் இது மன்னார்குடி செல்லும் பஸ். தொலைதூரமாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை வழங்க முடியும். திருப்பத்தூர் பயணிகள் இந்த பஸ்சில் ஏறக்கூடாது என்று கூறினார். இருவ ருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலையில் அருகில் இருந்தவர்கள் அமைதிப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து முகமது தாரிக் திருப்பத்தூரில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்தார். அந்த பஸ் திருப்பத்தூர் வரும்போது சாலையில் பஸ்சை மறித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு தினமாக இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வலியு றுத்தினார்.

    இனி இதுபோன்று நடக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்வதாகவும் இன்ஸ்பெக்டர் தெரி வித்தார். அவனைத் தொடர்ந்து நடத்துனர் ராஜே ந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருபவர்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    • வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை.
    • இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவலம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தவர் உடலை மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக உள்ள தால் இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.

    • அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார்.
    • பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23).

    இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னே ஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்காக ஏற்பாடுகளை ஆஸ்பத்திரியில் மேற் கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.இதையடுத்து விக்னேஸ்வ ரன் தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனு மதித்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் அங்கிருந்து குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி களிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ேமலும் அறுவை சிகிச்சையி ன் போது மின் ெவட்டு ஏற்பட்டு இருந்தால் அந்த கர்ப்பிணியின் நிலை என்னவாயிருக்கும் என பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    எனவே அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ தேவைகளை உடனே அரசு செய்யவேண்டும். மின் வெட்டு ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரியை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. வடகரை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 2 ஆசிரியர்கள் உள்ளனர். 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியரும், சமையலரும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கன்வாடி மைய சமையல் அறை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளுக்கு சமையல் செய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகள் படிக்கும் அறையில் தற்போது சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடங்கள் மழைக்கு ஒழுகத் தொடங்கியதால் மழைகாலங்களில் மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடகரை பஞ்சாயத்து கவுன்சிலர் பெரியகருப்பன் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறை சேதம் மற்றும் பள்ளிக்கட்டிடம் மழைநீருக்கு ஒழுகுவது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். பஞ்சாயத்திலும் தகவல் கூறியுள்ளேன். குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெப்பகுளத்தில் குப்பைகளை வீசுவதால் மாசு ஏற்படும் அவல நிலையில் உள்ளது.
    • வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமானது பாடலீஸ்வரர் கோவில். இந்த புகழ் மிக்க பாடலீஸ்வரர் தளத்தில் தான் இறைவி தவம் செய்து தன் மணவாளனை கரம்பற்றிய தலம் இத்தலமாகும். மேலும் இந்த கோவிலின் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் சிவன் சித்தராக இருந்து விளையாடினார். மேலும் இந்த குளம் சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. மேலும் இந்த குளத்தில் தான் புலிக்கால் முனிவர் அப்பர் அகத்தியர் வியாக்ரபாதத் மன்க்கானமுனிவர் உபமன்னியர் ஆதிராசன் ஆகியோர்களால் பூஜித்து பேரு பெற்ற தலமாகும். அப்படிப்பட்ட இந்தப் பாடலீஸ்வரர் புனித குளம் தற்போது தண்ணீர் படிப்படியாக குறைந்து குளத்தை சரிவர பராமரிக்காமல் குளத்திற்குள் ஆங்காங்கே குப்பைகள் கிடக்கிறது. மேலும் இந்த குளத்தி ல் உள்ள தண்ணீரை சரிவர பராமரிக்காமல் குளம் முழுவதும் மாசு அடைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

    இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பிஸ்கட் பொறி போன்றவற்றை அப்படியே பிஸ்கட் கவருடன் வீசுகிறார்கள். இதனால் குளம் முழுவதும் மாசடைந்து வருகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் தாள்களையும் குலத்திற்குள் போடுவதால் குளம் முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குளத்தில் வாழும் மீன்கள் அழியும் வகையில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 1008 சிவதலங்களில் ஒன்றான பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் மாசடைந்து வருவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மன வேதனையை ஏற்படுத்துகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதில் கவனத்தை செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காரணத்தால் மோட்டார் மூலம் நல்ல நீரை குளத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.

    ×