search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government"

    • மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான்.
    • திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.

    முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.

    இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    தேர்வு எழுதிய மாணவனாக நாங்கள் இருக்கிறோம். 2 ஆண்டு சாதனையை உங்களிடம் சொல்லி மதிப்பெண் போடுங்கள் என காத்திருக்கிறோம்.

    தி.மு.க. 2 ஆண்டு ஆட்சியில் 204 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான். திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்

    இதில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகர்மன்ற துணை தலைவர் மங்களநாயகி, மாவட்ட கவுன்சிலர் சோழன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா செந்தா மரைச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டி.கே.எஸ். இளங்கோ வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் திருகுமரன் நன்றி கூறினார்.

    • இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கி கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
    • புதுவை அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும். எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:-

    அரசின் சாதனைகள் என்பது அந்த அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை குறிப்பிடலாம். அரசின் வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனைகளாகாது. புதுவை அரசின் சாதனை களாக முன்வைக்கப்ப ட்டவை வெற்று அறிவிப்பு களே தவிர சாதனைகள் அல்ல. திட்டமிட்ட வளர்ச்சி என்பதே மாநிலத்தின் எழுச்சியாகும்.

    நிதி ஆதாரம் ஏதுமில்லாமல் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை தமது அரசின் ஈராண்டு சாதனையாக புதுவை அரசு வௌியிட்டிருப்பது அரசின் செயலற்ற தன்மைக்கே சாட்சியாக உள்ளது. நிதி ஒதுக்கீடே இல்லாத திட்டங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.

    மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என முதல்- அமைச்சர் அறிவித்தார். அதற்கு எங்கே நிதி.? வேலை வாய்ப்புக்கு தொழில்நுட்ப பூங்கா எங்கே.? காணவில்லை. 6 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் எங்கே.?. காங்கிரஸ், –தி.மு.க ஆட்சியில் வேலை யிழந்தோறுக்கு வேலை என்றார்.

    எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்.? உலக தமிழ் மாநாடு எப்போது? தமிழ் மொழிக்கான மொழியியல் பண்பாட்டு நிறுவனம் இன்று மூடுவிழா கண்டுள்ளது.

    எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது

    ஏழை மகளிருக்கு அறிவித்த மாத தொகை முதல் மாதம் வழங்கியதோடு காலாவதியானது. புதிய சட்டமன்றம், மேம்பாலம் எங்கே.? அரசின் பழைய கடன் தள்ளுபடியானதா.? நிதிக்குழுவில் புதுவை அரசு இணைக்கப்பட்டதா.? ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடருமா.? 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதா.? கூட்டுறவு நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டதா.? எதையும் இந்த அரசு செய்யவில்லை.

    ஆனால் உண்மையான சாதனைகளை பட்டியலில் சேர்க்காமல் இந்த அரசு மறந்து விட்டது. அதை நினைவு படுத்துகிறோம். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு என்று தனி மது பார், இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கி கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி.

    லாபத்தில் இயங்கிய மின்துறை தனியாருக்கு விற்பனை, காரைக்கால் துறைமுகம் அதானிக்கு தாரைவார்த்தல், கூட்டுறவு சர்க்கரை நூற்பாலை தனியாருக்கு ஏலம், மாணவர்களுக்கு உப்பு சப்பு இல்லாத அட்சபாத்திரா மதிய உணவு, 100 நாள் வேலைத்திட்டம் 5 நாள் வேலையாக சுருங்கியது, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் சாப்பாடு இல்லாத அவல நிலை, சிறப்புக்கூறு நிதி ரூ. 166 கோடி செலவு செய்யாமை, இவற்றை எல்லாம் சாதனை பட்டியலில் சேர்க்காதது ஏன்.? புதுவை மக்கள் விழிப்போடு உள்ளவர்கள். அவர்களை ஏமாற்றுவதை விடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்த புதுவை அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தும் போது அதனை நாங்கள் வரவேற்க தயங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் பொதுப்பணித்துறை கண்மாய்களும், 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன. சில வருடங்களாக பருவ மழை காலங்களில் மழை பெய்யாததாலும், மழை ஒரு சில பகுதியில் குறைந்த அளவே பெய்தாலும், கண்மாய்கள், வரத்துக் கால்வாய் தூர்வாரப் படாததால் கண்மாய்களில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவு கிறது. இதனால் கண்மாய் கள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

    இதுகுறித்து அபிராமம் பகுதி விவசாய சங்க நிர்வாகி கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை கண்மாய்கள் பெயரளவிற்கு தூர்வாரப்படுகிறது. ஆனால் யூனியன் கண்மாய் 30 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாரினாலும் ஆழமாகவோ, கண்மாய் கரையை பலப்படுத்துவதோ கிடையாது. வரத்துக் கால் வாயில் உள்ள முள்செடி களை கூட சுத்தப்படுத்துவது கிடை யாது. இதனால் பல லட்சம் அரசு பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர்கள் பயன்தரக்கூடிய நிலையில் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயி களுக்கு மிகப்பெரிய பொரு ளாதார இழப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடனும் வாங்கிய நிலையில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு வறட்சி நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க போர்க் கால அடிப்படையில் கண்மாய், குளங்களை தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மதுரை

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வந்தனர். இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர் பாக எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம், சுகாதார போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கல்யாண சுந்தரம், மணிகண்டன், பரஞ்சோதி, ராமசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் வாக்கு றுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இளநீர் ரூ.15 முதல் 17 வரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் சோடியம்,பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு கட்டுப்படுவதுடன், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதுடன், முகப்பருக்கள் கட்டுப்பட்டு சரும பாதிப்பும் சீராகும்.மேலும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த கொதிப்பை குறைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையவும் உதவுகிறது.இதில் உள்ள லாரிக் அமிலம் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

    இவ்வளவு சத்துக்கள் சிறப்புகள் வாய்ந்த இளநீரை எப்பொழுது வேண்டுமானலும் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள தென்னை சாகுபடியில் தற்போதைய சூழலில் பெரியளவில் வருமானம் கிடைப்பதில்லை.தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே இளநீர் ஒன்றை ரூ 15 முதல் 17 வரை இடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலைத்து நின்று வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை சாகுபடியை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். தேங்காய் மற்றும் இளநீரை பறித்து விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள கூலி உயர்வு, இடுபொருட்கள் ,பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய கோடைகால பானமான இளநீரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.ஆனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் இரண்டு மடங்கு விலைக்கு விட்டு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி இரவு பகல் பாராமல் பாடுபட்டு பொருளை விளைவித்த எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    எனவே அரசு விவசாயிகளிடம் நேரடியாக இளநீரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபத்தை விவசாயியும் அரசும் பங்கிட்டு கொள்ளலாம். இதன் மூலமாக விவசாயியும் பயன் அடைவதுடன் வேலையில்லா தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வர்த்தக மையத்தில் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் அவை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டன.

    வர்த்தக மையம்

    அந்த வகையில் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் நெல்லை மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரே கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்த இடமானது திறந்த வெளியாக இருந்த நிலையில், அங்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 45 நாட்கள் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. இதனை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் சென்று கண்டுகளித்து செல்வது வழக்கம்.

    ரூ.56.71 கோடி மதிப்பு

    இந்நிலையில் அந்த இடத்தில் ரூ.56.71 கோடியில் வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் முன்பு இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் முழுமையாக இடித்து தள்ளப்பட்டு அங்கு கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது அந்த பணிகள் சுமார் 80 சதவீதத்தை எட்டி உள்ளது.

    இந்த மையத்தில் அரசு, தனியார் நிறுவன கருத்தரங்குகள், உணவு கண்காட்சி, புத்தக திருவிழா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அரங்குகளுக்கு இடையே நடந்து செல்ல பாதை, அமர்ந்து உணவு சாப்பிடும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    குளிர்சாதன வசதி

    இதில் ஒரு அரங்கம் குளிர்சாதன வசதி கொண்டதாக வும், மற்றொன்று குளிர்சாதன வசதி இல்லாததாகவும் கட்டப்பட்டு உள்ளது. இங்கு நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கண்ணாடிகள் பொருத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலையில் இருந்து உள்ளே செல்பவர்களை வரவேற்கும் விதமாக பொதுமக்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் நுழைவு வாயில் ஆர்ச் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    விசாலமான கார் பார்க்கிங்

    இந்த வர்த்தக மையத்தின் கீழ்தளத்தில் சுமார் 370 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு விழாக்கள் நடத்துவதற்கும் இந்த கட்டிடம் பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் இதுபோன்ற விழாக்களுக்கு தனியார் மண்டபங்களை நாடி செல்லவேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

    வர்த்தக மையத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு வர்த்தக மையம் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி பேசினார்.
    • ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார்.

    மதுரை

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தி.மு.க. அரசு சொல்ல காரணம் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு வைக்கும் ஆப்பு என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி னார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதி.மு.க. சார்பில் கூத்தியார் குண்டு பகுதியில் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அதி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அதி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் அதி.மு.க. மட்டும் தான் ஏழை மக்களுக்கான கட்சி, இங்குதான் சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு வர முடியும். இங்கு தான் ஜனநாயகம் இருக்கிறது ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. அந்த குடும்ப கட்சியில் பல டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது வேலையே ஊழல் செய்வது தான்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது. தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வால் அடை யாளம் காட்டப்பட்ட 8 பேர் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று வந்திருக்கிறார்.

    ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய அந்த நபர்தான் முதன்மை அமைச்சராக இருக்கிறார். அவரை ஸ்டாலின் வாழ்த்தி கொண்டிருக்கிறார்.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேசுவதும் வேறுபாடாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கவர்ச்சி யான திட்டங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி களை காற்றில் பறக்க விடுவது தி.மு.க.வின் வாடிக்கை. தி.மு.க. அரசு இப்போது கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

    100 யூனிட் இலவசம் மின்சாரம் அதி.மு.க. ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கட்டாயப் படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து விட்டால் ஏதாவது ஒரு மானியம் மட்டுமே மக்கள் வாங்க முடியும். எனவே இந்த 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பு வைப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

    மக்களுக்கு சுமை மேல் சுமை ஏற்றி வரும் தி.மு.க. அரசை ஆட்சியில் இருந்து இறக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் அதி.மு.க. அமோக வெற்றியை பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், தகவல் தொழில்நுட்ப ப்பிரிவு மண்டல செய லாளர் ராஜ்சத்யன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    • அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
    • முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைக்க ள்ள முதல்-அமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

    இதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று திறந்து வைத்தார், ராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த ''ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் தலைவர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டாளர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டருக்கான வெளிநாடு சென்று தலைவர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன அதிபர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் அரசின் மற்ற துறைகளில் வழங்கப்பட்ட திட்டங்களின் பயன்கள் குறித்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆலோசனையின் பேரில் செய்தி-மக்கள் தொடர்பு பணியாளர்கள் புகைப்படகண்காட்சி அரங்கில் நின்று கொண்டு புகைப்பட விளக்கத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

    ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

    • புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணவெளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, முதன்மைகல்வி அலுவலர் தனசெல்வன் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, தனியார் நிறுவன தலைவர் ஹேமச்சந்திரன், துணை இயக்குனர் மேத்யூ வால்டர் மற்றும் கிராமலயா தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
    • இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சேலம்:

    சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.

    இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.

    இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.

    இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கவுன்சிலர் மீது வழக்கு

    இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.

    சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி

    பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் நேரில் பார்வையிட்டு சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாணவிகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியல் படி வழங்கப்படுகிறதா, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் கீதா ஜீவன் பரிமாறினார். பின்னர் அமைச்சருடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சமூகநல அலுவலர் கீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதீஷ்பாபு, வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்களும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தன்ராசு, சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் அன்பழ கன், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ் பாபு, முருகன், கருணாநிதி, பெருமாள் என்கிற முருகவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×