search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பட கண்காட்சி"

    • பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப் படக்கண்காட்சி நடை பெற்றது.

    இதில் முதல்- அமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளு படி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலை ஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கால மானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நலத் திட்ட உதவிகள் வழங்கியது. மாநில அளவிலான விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
    • நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

     அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து

    பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.

    ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.

    இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடையே தெரிவதற்கு இந்த கண்காட்சி

    கன்னியாகுமரி :

    மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியா குமரி அரசு அருங்காட்சியகத்தில் "காந்தி ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் காந்தியடிகளின் இளமைக்காலம் முதல் இறப்பு வரை சித்தரிக்கும் புகைப்பட தொகுப்பு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த கண்காட்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் உழைத்தவர் மகாத்மா காந்தி. அவரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை வரும் இளைய தலைமுறையினரிடையே எடுத்து செல்லும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கண்காட்சியில் காந்தியடி கள் பங்கேற்ற, உப்பு சத்தியா கிரகம், தண்டி யாத்திரை போன்ற அகிம்சை போராட்டங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காந்தியின் இளமை கால புகைப்படங்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் என்று பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்ப ட்டுள்ளன. இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். மேலும் காந்தியடிகள் என்றாலே கைராட்டை தான் அனைவரின் நினைவுக்கு வரும், அதன் நினைவாக கைராட்டையும் வைக்கப் பட்டுள்ளது. கண்காட்சியினை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்று புகைப்பட கண்காட்சி நடந்தது.

    இந்த கண்காட்சிக்கு வேலூர் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் (பொறுப்பு) இளமுருகன் தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து 100 புகைப்படங்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சுற்றுலா துறை தலைவர் ரவிசங்கர் துணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 55 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கோட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம். கல்லூரியில் பேச்சு கட்டுரை கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றனர்
    • பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    தக்கலை பஸ் நிலைய த்தில் அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப் படக் கண்காட்சி நடை பெற்றது.

    ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அரசு அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருவது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பட்டதை நேரில் பார்வை யிட்டது.

    முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப் படங்கள் மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

    • சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் "அக்கம் பக்கம்" என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை, ஐபோன்களைப் பயன்படுத்தி ஆறு மாத கால புகைப்படப் பட்டறைகளை மூன்று சென்னை பள்ளிகளில் (புளியந்தோப்பு தொடக்கப்பள்ளி, பெரம்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் ஸ்டெம் பள்ளி) நடத்தியது.

    இதில், 65 மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, புகைப்படங்களை எடுத்தனர். தொடர்ந்து சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் "அக்கம் பக்கம்" என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட்-22-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சி கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அந்த கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மேயர் பிரியா ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதில் துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் வசந்தி, சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
    • புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

    நாகர்கோவில், 

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பெதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சர்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

    இந்தக் கண்காட்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

    மேலும் குமரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

    • 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்
    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றியம், பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்தி ட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை பனையூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலு வலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
    • பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.

    ஓசூர்,

    இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மூலமாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஓசூரில் மத்திய அரசின் சாதனை திட்டங்கள் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நேற்று தொடங்கியது.

    சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பெங்களூரு சுங்க இலாகாத் துறை ஆணையாளர் பாலமுருகன் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.

    விழாவில்,கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ். நாத் வரவேற்றார். முடிவில், கோவை, மக்கள் கள அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்
    • இன்னுயிர் காப்போம் –நம்மை காக்கும் 48 திட்டம்,

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சியில் மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, இன்னுயிர் காப்போம் –நம்மை காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கா லமானவர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உண வுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றி ருந்தது.

    மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்து றையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றனர்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் ஆபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியை முத்தமிழ் முற்றத்தின் தலைவர் கீழப்பாவூர் சண்முகையா தொடங்கி வைத்தார்.

    கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதம் ஒரு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, ஓவியர் கோபால கிருஷ்ணன், கீதா, ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ, வளர்மதி, செந்தில் வேல்முருகன் மற்றும் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசித்தார்கள்.

    இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம்
    • காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின்சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைககப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம் – நம் மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம், புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×