என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி
- மதுரையில் வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ஊமச்சிகுளத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தலில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த நெடிய பயணம் குறித்த புகைப்படங்களும், மிசா போன்ற அடக்குமுறை காலத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.
மேலும் மதுரையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை காண பள்ளி மாணவர்கள் வருகை தரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேல், தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவைத்த லைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாநில தலைமை குழு உறுப்பி னர்கள் தனசெல்வம், ஆறு முகம், மாமன்ற குழு தலை வர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, வேட்டையன், வக்கீல் கலாநிதி, இளைஞர் அணி ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபா ண்டி, சசிகுமார், ஈஸ்வ ரன், கிருஷ்ணா பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, கவுன்சிலர்கள் காளிதாஸ், ரோகிணி பொம்மதேவன், இளைஞர் அணி மூவேந்திரன், மதி வெங்கட், சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்