search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி
    X

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
    • நடிகை ஹேமமாலினி எம்.பி. தொடங்கிவைத்தார்

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி–நாட்டு விமான சேவை–கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை அதிக அள–விலான பயணிகள் பயன்ப–டுத்தி வருகிறார்கள்.

    இங்கு இந்தியாவின் பெரு–மையை பறைசாற்றும் வகையில் பல்வேறு விதமான புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சிகளை அமைத்து பொது மக்களுக்கு இந்தி–யாவின் பெருமை குறித்து அறியும் வகையில் விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    அந்த வகையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டே–லின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி–யில் இருந்து விமான மூலம் சென்னை செல்ல இருந்த மாநிலங்களவை உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகள் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் கோபால–கிருஷ்ணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங் நயல், முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமையை அறியும் வகையில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பய–ணிகள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×