search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flyover"

    • தமிழகத்திலேயே மிகவும் நீளமான மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம் ரூ.612 கோடி மதிப்பில் 7.5 கி.மீ.தூரம் கட்டப்பட்டுள்ளது.
    • இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.



    மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம். 


    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து நத்தம் வரை 35 கிலோ மீட்டருக்கு ரூ. 1028 கோடியில் மத்திய அரசின் "பாரத் மாலா" திட்டத்தின் மூலம் 4 வழிச் சாலையாக விரி வாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொட ங்கப்பட்டது.

    இந்த சாலை யில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சி குளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலை வுக்கு பறக்கும் பாலம் கட்டப் ப ட்டு வருகி றது. ரூ. 612 கோடி யில் நவீன முறையில் இந்த பாலகட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.

    இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில், பலமான அஸ்திவாரத்துடன் கூடிய 268 ராட்சத தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது 150 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப் பட்டு உள்ளது. மேம்பால தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் 'கான்கிரீட் கர்டர்கள்', கிடைமட்ட வாக்கில் பொருத்தப் பட்டு உள்ளன. ஊமச்சிக்குளம் அருகே கான்கிரீட் கர்டர்களை தயாரிப் பதற்காக பிரத்யேக பணிமனை ஏற்படுத்தப் பட்டது. இங்கு தயாரான கான்கிரீட் கர்டர்கள் சரக்கு லாரிகளில் கொண்டு வரப் பட்டு, ஹைட்ராலிக் கிரேன் மூலம் தூண்கள் மேலே பொருத்தப் பட்டது. இதனைத்தொடர்ந்து அவை கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகள் வாயிலாக இணைக்கப் பட்டு வருகின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 95 சதவீதம் முடிந்து விட்டது.

    பறக்கும் மேம்பாலத்தின் மேல் தார்ச் சாலை மற்றும் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. பாலத்தின் கீழ் பகுதியில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி, தூண்களுக்கு இடையே இரும்புத்தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, சாலையோர நடைபாதை அமைக்கும் பணி ஆகியவை உச்சகட்ட வேகத்தில் நடந்து வருகின்றன. பறக்கும் மேம்பாலத்தின் கீழ் இரவை பகலாக்கும் வகையில் ஒவ்வொரு தூணுக்கும் இடையே பெரிய எல்.இ.டி. பல்பு, தூணைச்சுற்றி 4 திக்குகளிலும் சிறிய எல்.இ.டி. பல்புகள் பொருத்தும் பணி நடக்கிறது.


    பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப் பட்டுள்ள டால்பின் சிலை.

    மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்துள்ளன.ஊமச்சிக்கு ளம், திருப் பாலை, அய்யர்பங்களா உள்ளிட்ட பகுதிகளில் பாலத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வும், பொழுது போக்கும் வகையில் சிறிய அளவிலான பூங்காங்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் சோட்டாபீம், டால்பின், விவசாயி போன்ற சிலை கள் அமைக்கப் பட்டுள்ளன.

    மதுரையில் இருந்து நத்தம் வரை 4 வழிச் சாலை அமைய உள்ளது. அடுத்த படியாக நத்தத்தில் இருந்து திருச்சி-துவரங்கு றிச்சி க்கு 4 வழிச் சாலை அமைக்கப் பட உள்ளது. எனவே மதுரை-நத்தம் பறக்கும் பாலம் வழியாக திருச்சி சென்றால் 24 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரையில் இருந்து சென்னை செல்வோரும், இந்த சாலையை பயன்படுத்த இயலும். அவர்களுக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும். நகரில் போக்குவரத்து நெரிசலும் இந்த பாலத்தின் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே திண்டுக்கல் சாலையை திருச்சி உடன் இணைக்கும் வகையில், வாடிப் பட்டி- சிட்டம்பட்டி இடையே 4 வழிச் சாலை அமைக்கப் படுகிறது. இந்த சாலையும் பயன்பாட்டுக்கு வந்தால், மதுரையில் வசிக்கும் பெரும்பாலானோர் நத்தம் சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப் பாக, நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி சீக்கிரமாக திண்டுக்கல் செல்ல முடியும். அதுவும் தவிர மதுரை மாநகரில் இருந்து வெளிநகரங்களுக்கு செல்லும் 30 சதவீதம் பேர், நத்தம் பறக்கும் பாலத்தை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை- நத்தம் இடையேயான பறக்கும் பாலம் சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலமாக இந்த பாலம் விளங்குகிறது. இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    மீண்டும் தொடங்கியது

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    • கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
    • குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

    இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    மேலும் குட்டப்பாளையம், புது வெங்கரையாம்பாளையம், சத்திரக்காட்டுவலசு, கொல்லன்வலசு உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் தங்களின் வாகன போக்குவரத்து வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பலத்த மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்துபடி, மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது
    • பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ் டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள் வைப்பதாலும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் தச்சை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொது சுவர்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    ஒருபுறம் சாலையின் தடுப்பு சுவர்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்திலும் அரசியல் கட்சியினர் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டி வந்தனர். அதனையும் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் கிழித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.

    மேற்கொண்டு இதேபோல் அரசியல் கட்சியினர் பொது சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவியல் ரீதியிலான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .

    உடுமலை:

    உடுமலை தளி ரோட்டில் மேம்பாலம் அமைந்துள்ளது. ெரயில் வரும் நேரங்களில் மாற்றுப் பாதையாக இந்த சுரங்கப் பாதையை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் மருத்துவமனை அமைந்துள்ளன. தெற்கு பகுதிக்கு செல்லும் கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .தற்போது தண்ணீர் உள்ள பகுதிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் குண்டும் குழியில் வாகனத்தை ஓட்டி தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுரங்க பாதையை சீரமைத்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் விபத்தை தவிர்க்க 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்து சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார். இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கையாக வேகத்தடைகள், பேரி கார்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன.

    இதற்காக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து விரைவில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் தக்கலையில் நடந்தது.
    தக்கலை:

    தக்கலையில் மேம்பாலம் அமையுமானால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதரம் முடங்கி விடும். இது சம்மந்தமாக ஏற்கனவே வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு, உண்ணாவிரதம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று மணலி சந்திப்பில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    மேலும் இந்த போராட்டத்திற்கு அப்பகுதியில் பணிபுரியும் கடை ஊழியர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விஜய கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சண்முகம், மோசஸ் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தக்கலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #tamilnews
    ×