search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பால பணி"

    • அறிவிப்பு பலகையை கவனிக்காமல் சென்றதால் விபரீதம்
    • ஆழ்வார்கோவில் வழியாக செல்ல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ் (வயது 28). இவர் நேற்று இரவு திங்கள் நகருக்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டி ருந்தார்.

    நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பாலத்திற்காக நெய்யூர் தனியார் மருத்துவ மனையில் இருந்து வாக னங்கள் திருப்பி விடப் பட்டுள்ளது. அதேபோன்று வட்டம், அழகியமண்டபம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில் வழியாக செல்ல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதை கவனிக்காத அஜீஸ் திங்கள்நகரில் இருந்து நெய்யூர் வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நெய்யூர் அருகே ரெயில்வே மேம்பாலம் முன்பு மெயின் ரோட்டில் குவித்து வைக் பப்பட்டு இருந்த மண்மேடு களையும் தாண்டி மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் மோட்டார் சைக்கி ளுடன் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    படுகாயத்துடன் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
    • மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மின் கம்பம் மாற்றியமைக்க தாமதமாவதாக கூறியதையடுத்து மின்சாரத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து உடனடியாக மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதற்கு மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணியை பார்வையிட்டார். ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென சட்ட மன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

    எனவே பணிகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக முடித்து கொடுக்க எம்.எல்.ஏ. ஆலோசனைகள் கூறினார். அதன்படி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மின்சாரத்துறை பொறி யாளர், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

    • வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.
    • உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

    கோவை,

    கோவை மாநகரின் பிரதான சாலையாக அவினாசி சாலை கருதப்படுகிறது.

    விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.

    சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இதனால் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

    இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மேம்பாலமானது, எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கான வாகன பெருக்கத்தை கருத்தில் ெகாண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

    மொத்தம் 10.10 கி.மீ நீளத்தில் 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

    4 இடங்களில் ஏறுதளமும், 4 இடங்களில் இறங்கு தளமும், 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமைய உள்ளது. இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இருபுறமும் அணுகுசாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாயும் அமைய உள்ளது.

    மேம்பாலம் அமைய உள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைய உள்ளது.

    3 இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல், 3 இடங்களில் பாலங்களை திரும்ப கட்டுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.2024 ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் விதமாக அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    மீண்டும் தொடங்கியது

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    • அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார்.
    • ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலரும், ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

    திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் கணினி வழி பட்டா மாறுதல் மற்றும் ஒ.பி.சி. சான்றுகள் வழங்குவது குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் இ-சேவைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றியம் அச்சன்குடி ஊராட்சியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்ட நூலக கட்டிட பணிகளையும், முகிழ்தகம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் இயேசுபுரம் பச்சவரா ஊரணியை தூர்வாரும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறை யின் நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார். தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் சார்பில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

    ×