search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lower Bank"

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாத புரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் இன்று காலை தாய்கார்டன் இடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும், முதிய வர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நிருபர்களிடம் கூறுகையில், இறைத்தூதர் இப்ராஹிமின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள் ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்த பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம்,

    மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக் கொள்வதையே இப் பெருநாள் வலியுறுத்துகிறது என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர், இப்ராஹீம்சாபிர், செய லாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர் ஷேக்தாவூது ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தவசிலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் மருதாச்சலமூர்த்தி, சப்-லெப்டினன்ட் வினோத், ராஜேஷ்கண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
    • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

    பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கீழக்கரையில் பள்ளி செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது.
    • பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.

    ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை. குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் கிடக்கின்றன. மறுபக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இன்னமும் சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வாகனங்கள் செல்வதற்கும், மாணவர்கள் நடந்து செல்வதற்கும், மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் வாகனங்களை ஓட்டி வருவதற்கும் சிரமமாக இருக்கும்.

    இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை பணிகள் 5-ந்தேதி தொடங்கி பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும் என்றார்.

    வழக்கம்போல் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைவாக இந்த சாலையை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    • ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி மீண்டும் தொடக்கியது.
    • விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரெயில்கள், வட மாநில தொலைதூர ரெயில்கள் செல்லும் போது ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரெயில்வே கேட்டின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்க கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இப்பணி கடந்த 2018 அக்டோபர் 18-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டது. கடந்த 2020 அக்.10-ந்தேதி பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது. இந்நிலையில் 2020 மார்ச் 25-ந்தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடை பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட தையடுத்து 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது.

    இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டு மே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மேம்பால பணி களுக்கு தடைகோரி கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டு மான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்தி ற்கும் கொண்டு செல்லப் பட்டது.சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதை யடுத்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதபடுத்த உத்தரவிட்டாா்.

    மீண்டும் தொடங்கியது

    தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்ப பெற்றனர்.

    இதையடுத்து மேம்பால த்தின் இரு புறமும் அஸ்தி வாரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. கலெக்டரின் உத்தரவுப்படி இப்பணியை விரைந்து முடிக்க ரெயில்வே என்ஜினீயர்கள், ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.இப்பணியை முடிக்க மேலும் 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

    ×