search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
    X

    பாலத்திற்கு வர்ணம் பூசும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    ரெயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

    • ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
    • மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மின் கம்பம் மாற்றியமைக்க தாமதமாவதாக கூறியதையடுத்து மின்சாரத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து உடனடியாக மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதற்கு மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணியை பார்வையிட்டார். ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென சட்ட மன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

    எனவே பணிகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக முடித்து கொடுக்க எம்.எல்.ஏ. ஆலோசனைகள் கூறினார். அதன்படி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மின்சாரத்துறை பொறி யாளர், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×