search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்கம்"

    • வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
    • பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், வேதியியல், இயற்பியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி வருகிற 6-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

    பொதுத்தேர்வு நிறைவடைந்ததும் வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து மதிப்பீட்டு மையங்ளுக்கு 4-ந்தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

    தொடர்ந்து ஏப்ரல் 6-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடை பெற உள்ளன. முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் 6-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.

    தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியிடப்படும். மதிப்பீட்டு பணிகளின் பொது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.

    பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.

    இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    அவிநாசி:

    கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை அகில இந்திய வானொலி சாா்பில் உற்பத்தியை பெருக்கும் நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என மொத்தம் 13 வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பண்ணை பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவா்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவா்த்தனை எண்ணுடன் தங்களுடைய பெயா், முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகிய தகவல்களை சோ்த்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரியலூரில் புத்தக கண்காட்சி
    • ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

    அரியலூர்,

    56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புத்தகக் கண்காட் சியை அரியலூர் கோட்டாட் சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசி னார்.

    அப்போது அவர் பேசியதாவது:-புத்தகங்களைத் தேடி நூலகத்துக்குச் சென்றவர் கள் இன்று மிகப் பெரிய தலைவர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.ஆனால் இன்றைய தலை முறையினர் வாசிப்பு பழக் கத்தை மறந்து, கைப்பேசி, காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தங்களின் அறிவு மட்டுமல்லாமல் மனநிலையும் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு .எனவே மாணவர்களும் இளைஞர்களும் நல்ல நூல்களை வாசித்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்டட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முதல்நிலை நூலகர் க.ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

    • திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    • விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை தொடங்கியது. இதில் ஆறுபடை வீடு, காரிய சித்தி ஆஞ்சநேயர் வளாகத்திலுள்ள ஷண்முகம் மஹாலில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம் சங்கல்பம் ஆகியன நடைபெற்றது. பின்னர் முருகனின் வேலுக்கு காப்பு கட்டியவுடன், குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.

    விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவகிரி ஆதினம், உத்தண்டராஜகுரு சிவ சமயபண்டித குருசுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். வாவிபாளையம் ஞானபாரதி வெ.ஆனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றது.

    தொடர்ந்து முதல்நாள் யாகசாலை பூஜைகள், மண்டபார்ச்சனை, தீபாராதனை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி காலையில் கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில்கந்த சஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி சஷ்டி அன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    தாராபுரம் புதுபோலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளுடன் கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மாலை 4 மணிக்கு செண்பக சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. வருகிற 18-ந்தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8 மணி முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு முருகபெருமானுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் பாலமுருகன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் வெண்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் காலேஜ் ேராட்டில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அவினாசி அருகே சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17 -ந்தேதி வரை தினசரி அலங்கார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடக்கிறது.18-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பல்லடம் அருகே உள்ள முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் நேற்று விநாயகர் வேள்வியுடன் கந்தசஷ்டி விழாதொடங்கியது. 18-ந்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.  

    • புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ரத வீதியில் பூமிக்குள் புதைக்கப்பட்ட மின்கம்பி பயன்பாட்டுக்கு வந்தது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோடும் வீதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில், மின்கம்பிகளை அகற்றி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதைவட கம்பி அமைக்கப்பட்டுள்ளதை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு தமிழகம் முழுவதும் தேரோடும் வீதிகளில் மின்கம்பிகளை அகற்றி புதைவட கம்பி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் தேர் திருவிழா நாளன்று தேர் செல்லும் போது எவ்வித மின்சார இடையூறுமின்றி தேர் செல்வதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருவப்பூர் ஈஸ்வரன் திருக்கோவில் திருப்பணிக்காக ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய சிறப்பு வழிபாடு நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத்தலைவர்லியாகத் அலி, செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவபாஞ்சாலன், உதவி மின்பொறியாளர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், வட்டாட்சியர் கவியரசன், நகர்மன்ற கவுன்சிலர் கனகம்மன் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
    • இன்று காலை சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சையில் தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து .செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் கையெழுத்து போட்டனர்.

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உலக சுற்றுலா தினவிழா- 2023 முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுசுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து புகழிமலை சமணர்படுக்கை, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், இராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர்சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது .இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவியர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

      பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

      வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

      இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

      அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

      சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

      சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

      இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

      • குளித்தலையில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடங்கப்பட்டது
      • கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார்

      கரூர்,

      கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் "வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம்" கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் பொறுப்பு ஆறுமுகம் , கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய களஅலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

      ×