search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online classes"

    • "படித்தவர்களுக்கு வாக்களியுங்கள்" என வகுப்பில் உள்ளவர்களுக்கு பதில் அளித்தார்
    • வகுப்புகளின் நோக்கம் திசை திரும்பலாம் என்கிறது யுனகாடமி

    இந்தியாவில் பெங்களூரூவை மையமாக கொண்ட தனியார் இணையவழி கல்வி நிறுவனம் யுனகாடமி (Unacademy).

    இந்தியாவில் உள்ள பல அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்கும், தனியார் நிறுவனங்களின் தேர்வுகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கும் நாடு முழுவதும் ஏராளமானோர் இணைய வழியில் கற்று வருகின்றனர்.

    யுனகாடமி நிறுவனம் அவர்களுக்கு வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களை நியமிக்கும். அந்த ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் பாடத்திட்டங்களின்படி வகுப்புகளை இணைய வழியிலேயே எடுப்பார்கள். இந்த வழிமுறை கொரோனா காலகட்டத்திலிருந்து இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

    இந்நிறுவனத்தின் ஆசிரியர்களில் ஒருவர் கரன் சங்க்வான். இவர் கிரிமினல் சட்டத்துறையில் பட்டப்படிப்பு பெற்றவர். கரன் சங்க்வானிடம், அவரது வகுப்பு ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றில் கொண்டு வர இருக்கும் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்டது.

    இது குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இணையவழியில் உரையாடும் போது, "படித்தவர்களுக்கு வாக்களியுங்கள்" என வகுப்பில் உள்ளவர்களுக்கு கரன் பதில் தெரிவித்தார். வகுப்புகளில் தங்கள் சொந்த கருத்துக்களை ஆசிரியர்கள் தெரிவிப்பதனால் வகுப்புகள் எடுக்கப்படுவதன் நோக்கம் திசை திரும்பலாம் என குற்றம் சாட்டி அவரை யுனகாடமி நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது பலவித கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். புது டெல்லி முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால் கரனின் பதவி நீக்கத்திற்கு ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது, "படித்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்பது ஒரு குற்றமா? படிக்காதவர்களை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் படிக்காதவர்களாக இருப்பது கூடாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான இந்த காலகட்டத்தில் படிக்காதவர்கள் மக்கள் பிரதிநிதிகளானால் நவீன இந்தியாவை கட்டமைக்க முடியாது," என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு தாமதமானதால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாததால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகள் நேற்றே தொடங்கி நடந்தது.

    மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் அதற்கான லிங்க் அனுப்பப்பட்டது.

    இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்தனர்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. அதன் பின்பு வெயில் தாக்கத்தால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.

    பள்ளி திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

    • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை யொட்டி மதுரை- விருதுநகர் நான்குவழிச்சாலை செல்கிறது.

    நெடுஞ்சாலை உயரமானதால் ஓமியோபதி மருத்துவ கல்லூரி வளாகம் தாழ்வானது. இதனால் மழைக்காலங்களில் மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    கடந்தாண்டு பெய்த தொடர்மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழந்ததால் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன.

    இந்த ஆ ண்டும் தற்போது உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் வர தொடங்கி உள்ளது.

    இதனால் திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக புகுந்து வந்தது. இன்று காலை கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து இன்று மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையின் வெளியிலேயே பாடம் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் வகுப்புகளை நடத்த முடியவில்லை. நாளை முதல் 15 தினங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2, 3, 4-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கிளினிக் வகுப்புகளும் நடைபெறும்.

    கிளினிக் வகுப்புகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவ மனையில் நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    • காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
    • அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கூட்டங்கள் நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உயர் கல்வி மையங்கள் உள்பட சுமார் 1,800 பள்ளிகள் உள்ளன. நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது. டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேச மாவட்டத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும்.
    • ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடி பாடம் நடத்த ஏற்பாடு.

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை( புதன்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் 9, 10, 11, 12 வகுப்புகள் மிக மிக முக்கியமான வகுப்புகள்.

    உடனடியாக Board Exam-க்கு அவர்கள் தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடியாக பாடம் நடத்துவதற்கு தேவைப்படுகின்ற வகுப்பறைகளை தயார் செய்திட முடிவெடுத்திருக்கின்றோம்.

    கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. மெட்ரிக் பொறுத்தவரை, எல்லா சான்றிதழ்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    இருந்தாலும், அந்தந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தனியாக ஒரு Special DEO போட்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அமர்ந்து, யார், யாருக்கெல்லாம் duplicate copy இல்லையோ, அவர்களையெல்லாம் வரவழைத்து, யார், யாருக்கெல்லாம் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றதோ, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×