search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி முதல் படகு போக்குவரத்து தொடக்கம்
    X

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை.

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி முதல் படகு போக்குவரத்து தொடக்கம்

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தல மான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையைகடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். கடல் நடுவில இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துஉள்ளதால் இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்தமுறை திருவள்ளுவர்சிலைபராம ரிப்புபணியானதுரூ1கோடி செலவில்கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்டஇரும்புபைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக் கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப் படுத்தப்பட்டு தயாராகி கொண்டிருக்கிறது.

    Next Story
    ×