search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks"

    • பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம், பூட்டை சாலை, கள்ளக்குறிச்சி மெயின் சாலை, திருக்கோவிலூர் மெயின் ரோடு, அரசம்பட்டு, வடசெட்டியந்தல், மூரார்பாளையம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு அனுமதி பெற்று அமைந்துள்ள பட்டாசு கடைகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
    • அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    குழு அமைப்பு

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    11 நிறுவனங்கள்

    சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    643 விண்ணப்பங்கள்

    இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர்.
    • வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேர்ந்த வெடி விபத்துக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி வருவாய் கோட்டாசியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள்,வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மன்னார்குடி வட்டசியர் கார்த்திகேயன் தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தேஷனாமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.
    • பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

     தஞ்சாவூர்:

    தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து பட்டாசு விற்பனையா ளர்கள், தயாரிப்பாளர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது.

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் தொட்டியில் 200 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

    இருவழி பாதை கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.

    அனைவரும் விழிப்புடனும் கவனமாகவும் இருந்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

    பெரியவர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.

    பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

    நனைந்த பட்டாசுகளை எரிந்து கொண்டிருக்கும் கியாஸ், விறகு அடுப்பின் அருகே வைத்து உலர வைக்க கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
    • நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.

    இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டாசு தொழில் பிரச்சினைக்கு பிரதமர் உடனடி தீர்வு காணவேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர் (டான்பாமா)சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் கணேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

    விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரடியாக 3 லட்சம் தொழி லாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவினர் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதல்படி தயாரிப்பாளர்கள் பசுமை பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.

    தீபாவளி உள்ளிட்ட வட மாநில பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை உச்சநீதி மன்றம் விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது தற்போது உலகம் முழுவதும் இந்துக்கள் பண்டியாக மட்டுமின்றி பல்வேறு மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை பட்டாசு வெடிப்பது இந்திய கலாச்சாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் கூறியுள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் ஆர்டர்கள் கேட்டு உற்பத்தியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கடிதங்கள் தொடர்ந்து வருகிறது.

    மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிக்கப்படும் என தனிநபரால் கொடுக்கப்பட்ட வழக்கு 2015 முதல் உச்சநீதிமன்றத்தில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்சினையை உடனடியாக தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதிக்கான வசதிகளையும் செய்து தர பிரதமர் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
    • பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ×