search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exploration"

    • கண்மாய்- கால்வாய்கள் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார் கோவில் மற்றும் பார்த்தி பனூர் பகுதியில் கீழ்வைகை வடி நிலக்கோட்டம் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண் மை நவீனப்படுத்தும் திட்டத் தின் கீழ் புணரமைக்கப்பட்ட கால்வாய்கள் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் பார் வையிட்டு ஆய்வு செய் தார்.

    இந்த ஆய்வின்போது நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஒன்றியத்தில் வைகை ஆற்றின் கீழ் உள்ள பார்த்திபனூர் நீர் ஒழுங்கி யின் இடது பிரதான கால் வாய் நெடுகை 22.20 முதல் 45.00 கிலோமீட்டர் வரை மேல் மற்றும் கீழ் நாட்டார் கால் பிரிவு வாய்க்கால்களை ரூ. 30.50 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வருவதை பார் வையிட்டார்.

    மேலும் பிரதான கால் வாயில் 4 ரெகுலேட்டர்கள், 35 தலைமதகுகள், 1 பாலம், 1 விழிந்தோடி, 1 சுரங்கப் பாதை போன்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை பார்வை யிட்டார். மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வைகை அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள தையொட்டி பார்த்திபனூர் மதகு அணை மற்றும் ராம நாதபுரம் பெரிய கண் மாயினை பார்வையிட்டார். பின்னர் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது கடலுக்கு செல்வதை தடுத்து பாசனக் கண்மாய்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் திட்ட மிடுதல் வேண்டுமென அலு வலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்தி கேயன், உதவி செயற்பொறி யாளர் கார்த்திகேயன் மற் றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம், பூட்டை சாலை, கள்ளக்குறிச்சி மெயின் சாலை, திருக்கோவிலூர் மெயின் ரோடு, அரசம்பட்டு, வடசெட்டியந்தல், மூரார்பாளையம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு அனுமதி பெற்று அமைந்துள்ள பட்டாசு கடைகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சேலம்‌ மாவட்ட தொழி லாளர்‌ துறை தொழிலாளர்‌ உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ‌
    • இதில்‌ 5 நிறுவனங்களில்‌ முரண்பா டுகள்‌ கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சென்னை முதன்மை செயலாளர் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவு ரைபடியும் சேலம், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் சேலம் மாவட்ட தொழி லாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

    சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட 28 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் எடைகள் மற்றும் அள வைகளின் கீழ் தயாரிப்பாளர்கள், விற்ப னையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள் (உரிமம் புதுப்பிக்கப்படா மல் செயல்படுதல் உட்பட) நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் 5 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டது.

    மேலும் 29 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 12 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் சட்டமுறை எடையளவுகள் விதிகள் 2011-ன் கீழ் பாட்டில்கள் மற்றும் சிகரெட் லைட்டர் கடைகள் உள்ளிட்ட 20 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    எடை அளவுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகள் முத்திரையின்றி பயன்ப டுத்து வதும், சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்ப டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டால் அப ராதம் உள்ளிட்ட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரிவித்தார்.

    ×