search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய்- கால்வாய்கள் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
    X

    புனரமைக்கப்பட்ட கண்மாய்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    கண்மாய்- கால்வாய்கள் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

    • கண்மாய்- கால்வாய்கள் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார் கோவில் மற்றும் பார்த்தி பனூர் பகுதியில் கீழ்வைகை வடி நிலக்கோட்டம் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண் மை நவீனப்படுத்தும் திட்டத் தின் கீழ் புணரமைக்கப்பட்ட கால்வாய்கள் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் பார் வையிட்டு ஆய்வு செய் தார்.

    இந்த ஆய்வின்போது நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஒன்றியத்தில் வைகை ஆற்றின் கீழ் உள்ள பார்த்திபனூர் நீர் ஒழுங்கி யின் இடது பிரதான கால் வாய் நெடுகை 22.20 முதல் 45.00 கிலோமீட்டர் வரை மேல் மற்றும் கீழ் நாட்டார் கால் பிரிவு வாய்க்கால்களை ரூ. 30.50 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வருவதை பார் வையிட்டார்.

    மேலும் பிரதான கால் வாயில் 4 ரெகுலேட்டர்கள், 35 தலைமதகுகள், 1 பாலம், 1 விழிந்தோடி, 1 சுரங்கப் பாதை போன்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை பார்வை யிட்டார். மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வைகை அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள தையொட்டி பார்த்திபனூர் மதகு அணை மற்றும் ராம நாதபுரம் பெரிய கண் மாயினை பார்வையிட்டார். பின்னர் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது கடலுக்கு செல்வதை தடுத்து பாசனக் கண்மாய்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் திட்ட மிடுதல் வேண்டுமென அலு வலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்தி கேயன், உதவி செயற்பொறி யாளர் கார்த்திகேயன் மற் றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×