என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது
    X

    அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
    • பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×