search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி பட்டாசு ஆலை; ேபாலீசார் வழக்குப்பதிவு
    X

    அனுமதியின்றி பட்டாசு ஆலை; ேபாலீசார் வழக்குப்பதிவு

    • அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×