search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக"

    • தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    குழு அமைப்பு

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    11 நிறுவனங்கள்

    சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    643 விண்ணப்பங்கள்

    இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி
    • சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நல்லூர் பகுதியில் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாலப்பணிகள் தொடங்கப் பட்டதையடுத்து சுசீந்தி ரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு சென்ற பஸ்கள் அனைத்தும் வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொது மக்கள் இருசக்கர வாக னங்களில் மற்றும் ஆட்டோக் களை செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக் கப்பட்டு இருந்தது. தற்காலிக பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வந்தனர்.

    பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப் பட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருங்கூரிலிருந்து சுசீந்திரத்திற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மருங்கூரிலிருந்து மயிலாடி, வழக்கம்பாறை வழியாக சுசீந்திரத்திற்கு வந்தனர். தற்காலிக பாலம் சேதமடைந் துள்ளதையடுத்து அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தற்பொழுது நடைபெற்று வரும் பாலப்பணியை துரிதமாக முடித்து பஸ் போக்கு வரத்தை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் சேதம் அடைந்த தற்காலிக பாலத்தை உடனடி யாக சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி னார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது.
    • பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. தற்போதைய பஸ் நிலையம் உள்ள இடத்திலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையம்

    இந்நிலையில் பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் என்றாலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயல்பட உள்ளது. ஆனால் அவசரமாக அமைக்கப்பட்டதால் போதுமான இட வசதியின்றி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 15 முதல் 20 பஸ்கள் வரை மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

    பஸ்களுக்கான நிறுத்தங்கள் சரியாக ஒதுக்கப்படாததால் பஸ்கள் ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றன. அரசு நகரப் பஸ்கள் எங்கே உள்ளது என தெரியாமல் பயணிகள் அலைமோதுகின்றனர். அதேபோல, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்து க்குக்குட்பட்ட நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.

    பெரும்பான்மையான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நெற்பயிர்கள் அறுவடை முடிந்த நெல் மணிகளை விவசாயிகளிடம் அரசு நேரடியாக தற்காலிக டெண்டர் அமைத்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் பெரும்பாலான தற்காலிக நெல்கொள்முதல் நிலையம் களிமண், மண் தரை கொண்ட களங்களாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் விவசாயிகள் கொட்டிய நெல் மணிகள் மழை காலங்களில் நீர் சூழ்ந்து கொள்வதாலும், ஈரப்பதம் குறையாமல் இருப்பதினால் கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சிமெண்ட் களத்துடன் கூடிய நிரந்திர கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிதியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் களம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் வருவாய் துறைக்கு உட்பட சர்வே எண்:44-ல் சுமார் 40 சென்ட் கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட களம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த இடம் முழுவதும் சிமெண்ட் களம் அமைத்து அதை நிரந்திர கொள்முதல் நிலையமாக அமைத்து கொடுத்தால் விவசாயி களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    முன்னதாகவே டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008-ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரி க்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே விண்ணப்ப ங்களை வரும் 30-ந் தேதி முடிய பதிவு செய்யலாம். 30-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ண ப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    குறிப்பிட்ட காலக்கெ டுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன் புல வரைபடம் (6 நகல்கள்) கிரைய பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய தற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் ( நிரந்தர கணக்கு எண் அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்திய தற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவல–கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டது எனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ண ப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    விண்ணப்பங்களை வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

    விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம்-deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்-deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 100 காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு உத்தரவிட்டுள்ளது.
    • பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, நடுநிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதன்பிறகு, ஆசிரியா் பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், கொல்லிமலை ஒன்றியத்தில் 41 காலியிடங்களும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 9 இடங்களும், இதர ஒன்றியங்களில் 21 பணியிடங்கள் என மொத்தம் 71 இடங்களில் இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்தவும், 15 பட்டதாரி ஆசிரியா்கள், 14 முதுநிலை ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

    அந்தந்த ஒன்றியத்திற்கு உள்பட்டவா்கள் காலியிடங்கள் உள்ள பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக அறிந்து தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம், சான்றிதழ்களை வழங்கி, தங்களுடைய பாடப்பிரிவுக்கான பணியிடம் காலியாக இருப்பின் வேலைவாய்ப்பு கோரலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×